தமிழ்நாடு

தற்காலிக இன்பம், போதைக்கு 'NO' சொல்லுங்கள் - மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

Published On 2024-06-28 06:05 GMT   |   Update On 2024-06-28 06:26 GMT
  • தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது கவலையளிப்பதாகக் கூறினார்.
  • மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கும் விஜய் ஆறுதல் கூறினார்.

சென்னை:

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதைப்பொருள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதகிம் காணப்படுவதும், பரவலாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் இதற்கு சாட்சியாக காட்டப்படுகிறது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது கவலையளிப்பதாகக் கூறினார். போதைப்பழக்கத்திற்கு எதிராக Say No To Temporary Pleasures, Say No To Drugs என்று கூறி மாணவர்களை உறுதி மொழியும் ஏற்க வைத்தார் விஜய்.

மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கும் விஜய் ஆறுதல் கூறினார். வெற்றியும், தோல்வியும் இருசேர கலந்தது தான் வாழ்க்கை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய விஜய், Success is never Ending, Failure is never Final என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.





Tags:    

Similar News