தமிழ்நாடு

பா.ம.க.வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி

Published On 2025-03-01 12:03 IST   |   Update On 2025-03-01 12:03:00 IST
  • நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
  • 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.

சென்னை:

பா.ம.க. சார்பில் 18-வது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில்,

* வேளாண்துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும்.

* நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.

* பயிர்க்காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

* வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி ஒதுக்கப்படும்.

* ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

* 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.

* பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க சிறப்புத் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Tags:    

Similar News