தமிழ்நாடு

ஈரோட்டில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு

Published On 2025-03-01 12:20 IST   |   Update On 2025-03-01 12:21:00 IST
  • கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
  • விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

தமிழக கர்நாடக எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிந்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News