நலமுடன் நல்லாட்சி நடத்துக- மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
- ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 72-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து வருமாறு:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையில் தமிழ் நாடு எல்லாத் துறைகளிலும் திசைகளிலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நலமுடன் நல்லாட்சி நடத்துக.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில்,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மும்மொழிகளிலும் அவர் பதிவிட்டு உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து செய்தியில்:-
இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
இந்திய ஒன்றியத்தின் முதல்வர்களில் முதலிடம் வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்துவதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால், ராஜீவ் சுக்லா எம்.பி., வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.