சென்னையில் புறநகர் ரெயில் சேவை பகுதியாக ரத்து
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- ஆறு மணி நேரம் வரை ரெயில் சேவை ரத்து.
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணி, 9.00 மணி, 9.30 மணி, 10.30 மணி மற்றும் 11.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் காலை 9.55 மணி, 11.25 மணி, மதியம் 12.00 மணி, 1.00 மணி, 2.30 மணி மற்றும் மாலை 3.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணி, 10.15 மணி, மதியம் 12.10 மணி,1.05 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதியில் காலை 11.45 மணி, மதியம் 1.15 மணி, 3.10 மணி மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணி, மதியம் 12.40 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதியில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.