தமிழ்நாடு

சென்னையில் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

Published On 2025-03-09 18:45 IST   |   Update On 2025-03-09 18:45:00 IST
  • சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
  • தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இந்நிலையில், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 5.10 மணி முதல் ரத்து செய்யப்பட்ட மின்சார ரெயில் மீண்டும் தொடங்கியது.

மாலை 4.10 மணிக்கு மேல் சேவை தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News