தமிழ்நாடு
ஈரோடு இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு பதிவு
- 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
- அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 46 பேர் போட்டியிடும் இத்தேர்தர்லில் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மரப்பாலம் முனிசிபல் சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியிலில் ஈடுபட்ட சீதாலட்சுமி உள்பட 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.