தமிழ்நாடு
பெண்களை காரில் விரட்டிச்சென்று மிரட்டிய வழக்கு- 4 பேருக்கு பிப்.14 வரை நீதிமன்ற காவல்

பெண்களை காரில் விரட்டிச்சென்று மிரட்டிய வழக்கு- 4 பேருக்கு பிப்.14 வரை நீதிமன்ற காவல்

Published On 2025-02-01 08:03 IST   |   Update On 2025-02-01 08:03:00 IST
  • கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்தனர். அத்துடன் அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டினர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். வாலிபர்கள் வந்த 2 கார்களையும் பொத்தேரியில் பறிமுதல் செய்தனர். அதில் ஒரு கார் இரும்புலியூரை சேர்ந்த சந்துரு என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News