தமிழ்நாடு

செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் அடிதடி - பரபரப்பு

Published On 2025-03-05 12:14 IST   |   Update On 2025-03-05 12:14:00 IST
  • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அந்தியூர் நிர்வாகிகளுக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படும் நிலையில், திட்டமிட்டு மோதல் உருவாக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 

Tags:    

Similar News