தமிழ்நாடு

கல்வி மூலம் கலவரத்தை தூண்டுவதாக புகார் - எச்.ராஜா பிதற்றுவதாக சேகர்பாபு விமர்சனம்

Published On 2025-03-05 11:53 IST   |   Update On 2025-03-05 11:53:00 IST
  • அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை.
  • தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கல்வி மூலம் கலவரத்தை தூண்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி இருப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

* அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை. அவர் ஒரு புறம் பிதற்றிக்கொண்டே இருக்கட்டும்.

* எங்கள் பணி கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை ஒன்றியத்திலே முதலமைச்சர் அரும்பணியால் நிரூபிப்பார்.

* ஒருகாலத்தில் மாநகராட்சி பள்ளிகளை வெறுத்து ஒதுக்கிய நிலை மாறி இன்றைக்கு மாநகராட்சி பள்ளிகள் வெகுமதி பள்ளிகளாக தமிழகத்தில் நிலவுவதை கல்வியாளர்கள், மாணவர்களுடைய பெற்றோர்களும், மாணவ செல்வங்களும் உணர்ந்து இருக்கிறார்கள்.

* இதுபோன்ற பிதற்றலுக்கு பதில் கூற தயாராக இல்லை. அதற்கு உண்டான நேரமும் இல்லை.

மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சூசகமாக கூறியிருப்பது...

* பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கிற வேலை எங்களுக்கு இல்லை.

* எங்களது பயணம் சீராக முதலமைச்சர் தலைமையில் உறுதிமிக்க கூட்டணியாக, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி பொலிவோடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

* அதற்கு தலைமை தாங்குகின்ற முதல்வர் ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. உறுதியோடு 60 ஆண்டு காலம் அரசியல் பயணத்தை மேற்கொண்டவர்.

ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை குறித்து...

* எடப்பாடி சார் இங்கே இருந்து 8 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறார். அவரிடமே பதில் வாங்கிக் கொள்ளுங்கள்.

அனைத்துக்கட்சியில் பங்கேற்காத கட்சிகள் குறித்து...

* தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

* தமிழை பற்றி, தமிழ்நாட்டை பற்றி, தமிழக மக்களை பற்றி கவலை இல்லாதவர்கள் புறக்கணிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறினார்.

Tags:    

Similar News