தமிழ்நாடு

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம்

Published On 2025-03-11 12:54 IST   |   Update On 2025-03-11 12:54:00 IST
  • படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.
  • இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

காதல்...

18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று தவறாக நினைத்து அவர்கள் வெகுதூரம் செல்கிறார்கள். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக 12 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காதது காரணமாக உள்ளது.

படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில்தான் வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம் வேரூன்றத் தொடங்குகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தால் காதல் அவர்களுக்கு எதையும் விட பெரிதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

தாங்கள் விரும்பும் இளைஞனை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயமும் தங்கள் குடும்பத்தினர் தங்களைப் பற்றி அறிந்தால் மீண்டும் அவரைச் சந்திக்க விடமாட்டார்கள் என்ற பயமும் அவர்களை மிகவும் விரக்தியடையச் செய்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காதலனுடன் ஓடிய மாணவிகள் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில் ஏராளமானோர் மீண்டும் தங்களுடைய பெற்றோரை நாடி வருகிறார்கள்.

இளமைப் பருவத்தில் குழந்தைகளின் மனதின் ஆழத்தை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் எல்லா விஷயங்களையும் பற்றி தங்களிடம் வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆதரவு இல்லாதபோதுதான் குழந்தைகள் அந்நியர்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு நல்ல வருமானம் மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் அவர்கள் கடினமாக உழைத்து சாதிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வகையான சிந்தனையை சிறுமிகளிடம் விதைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News