தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2025-03-11 07:24 IST   |   Update On 2025-03-11 07:24:00 IST
  • சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • மயிலாடுதுறையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

Tags:    

Similar News