தமிழ்நாடு
22ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: பினராய் விஜயன், ரேவந்த் ரெட்டி பங்கேற்பு

22ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: பினராய் விஜயன், ரேவந்த் ரெட்டி பங்கேற்பு

Published On 2025-03-18 19:25 IST   |   Update On 2025-03-18 19:25:00 IST
  • தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
  • கேரள மாநில முதல்வர், தெலுங்கானா மாநில முதல்வர் பங்கேற்கின்றனர்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ் பங்கேற்கின்றனர். அதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

Tags:    

Similar News