தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: முக்கிய குற்றவாளிகளின் ஜாமின் மனு தள்ளுபடி

Published On 2025-02-25 16:19 IST   |   Update On 2025-02-25 16:19:00 IST
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு.

கடந்த ஆண்டு ஜூன் மாத் 18-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷச் சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது. மோசமான மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கும் கருணை காட்டக்கூடாது என என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் ஜாமின் மனுவை திரும்பப்பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம், விஜயாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News