தமிழ்நாடு
சென்னையை அழகுபடுத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு - மேயர் அறிவிப்பு
- சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும்.
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகரை அழகுபடுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.