தமிழ்நாடு
கூட்டாட்சி கட்டமைப்பு: இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
- நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
- தொகுதி மறுவரையறைக்கு எதிரான உறுதிப்பாட்டில் ஒன்றிணைந்துள்ள அனைத்து முதல்வர்கள், தலைவர்களை வரவேற்கிறேன்.
முதலமைச்சருர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்.
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான உறுதிப்பாட்டில் ஒன்றிணைந்துள்ள அனைத்து முதல்வர்கள், தலைவர்களை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.