உலகம்

சராசரியைவிட கூடுதல்.. இந்தியாவின் வலுவான வர்த்தக விரிவாக்கம்- ஐ.நா. அறிக்கையில் தகவல்

Published On 2025-03-16 15:56 IST   |   Update On 2025-03-16 15:56:00 IST
  • 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
  • அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது.

ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சா்வதேச வா்த்தக தரவுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2024-ம் ஆண்டில் உலக அளவிலான வா்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி அளவுக்கு விரிவடைந்து சுமாா் ரூ. 2,869 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது. அதன்படி சேவைத் துறை வா்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வா்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சா்வதேச அளவில் விரி வடைந்துள்ளது.

பல வளா்ந்த நாடுகள் வா்த்தகத்தில் சற்று சரிவைச் சந்தித்து வரும் சூழலில், வளரும் நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா சராசரியை விட சிறந்த வா்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.

இந்தியாவிலும், சீனா விலும் வா்த்தகம் அதிகரித் துள்ளது. குறிப்பாக ஏற்று மதி சராசரியைவிட அதி கரித்து காணப்பட்டது. தென் கொரியாவில் ஏற்று மதி வளா்ச்சி சரிந்திருந்த போதும் வருடாந்திர அடிப்படையில் வளா்ந்த நாடுகளில் வா்த்தக விரிவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது. ஆனால் ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவில் சரக்கு வா்த்தகத்தில் இறக்குமதி 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6 சதவீதமாக இருந்தது. அதுபோல, சரக்கு வா்த்தகத்தில் ஏற்றுமதி வளா்ச்சி 7 சதவீத வளா்ச்சி யையும், வருடாந்திர அடிப்படையில் 2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

உலக வா்த்தகம் 2025-ஆம் ஆண்டின் தொடக் கத்தில் நிலையானதாக இருக்கும்.

ஆனால் அதிகரித்து வரும் புவிசாா் பொருளா தார பதற்றங்கள், உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்ளிட்ட வற்றால் வரும் காலாண்டு களில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News