உலகம்

முன்பைவிட இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: டிரம்பிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

Published On 2025-02-14 04:27 IST   |   Update On 2025-02-14 04:27:00 IST
  • உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
  • 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.

வாஷிங்டன்:

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்பை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:

நான் இந்த அறைக்குள் நுழைந்தவுடனே அகமதாபாத் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம், நாங்கள் பெரிய பேரணி நடத்தியதும், அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப், ஹவுடி மோடி ஹூஸ்டனில் செய்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.

இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம்.

எங்கள் உறவை இன்னும் விரிவானதாக ஆக்குவதற்கும், எங்கள் உறவில் மேலும் உயரங்களை அடைவதற்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தீர்கள்.

அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்காவின் தேசிய நலனை உச்சமாக வைத்திருப்பதை பாராட்டுகிறேன். அதிபர் டிரம்பை போலவே இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

உங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில் நாங்கள் இன்னும் அதிக வேகத்துடன் வேலை செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று முறை வேகத்துடன் செயல்படுவோம் என இந்திய மக்களுக்கு நான் உறுதியளித்தது போல், அடுத்த 4 ஆண்டுகளில், அதிபர் டிரம்ப்புடன், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், அவரது முதல் பதவிக்காலத்தை விட இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News