உலகம்

ஒலிம்பிக்ஸ் துவக்க விழா சர்ச்சை.. கோபத்தில் வெடித்த டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

Published On 2024-07-30 02:10 GMT   |   Update On 2024-07-30 02:10 GMT
  • கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
  • இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஓலிம்பிக்ஸ் 2024 துவக்க விழாவில் விசேஷ அணிவகுப்பு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் நகரை அதிர வைத்தன. சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் வரிசையில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.

இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பினர். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "உண்மையில் நான் வெளிப்படையான ஒருவன், ஆனால் அவர்கள் செய்தது மிக மோசமான விஷயம். கடந்த இரவு லாஸ்ட் சப்பர் நிகழ்வை அவர்கள் வெளிப்படுத்தியதை போன்று நாங்கள் செய்ய மாட்டோம்," என்று தெரிவித்தார்.

சர்ச்சைக்கு உள்ளான அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக் கொண்டு லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் வகையில் மேஜையில் படுத்திருந்தார்.

Tags:    

Similar News