உலகம்

பெரு நாட்டில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த பேருந்து - 2 பேர் உயிரிழப்பு

Published On 2025-02-15 07:24 IST   |   Update On 2025-02-15 07:24:00 IST
  • பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
  • 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பெரு நாட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பெரு நாட்டில் பேருந்து விபத்துக்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டில் 2023 ஆம் ஆண்டு  சாலை விபத்துக்களில் 3,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News