உலகம்

கோப்புப்படம் 

ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா?

Published On 2025-02-04 08:15 IST   |   Update On 2025-02-04 08:15:00 IST
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
  • அமெரிக்க இராணுவ விமானங்களின் தொலைதூர இலக்கு இந்தியா.

அமெரிக்காவில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் தனது கடுமையான நிலைப்பாட்டை செயல்படுத்தும் வகையில், அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களை நாடு கடத்தத் தொடங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெயர் தெரிக்க முடியாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் பேசும் போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் C-17 விமானம் இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க இராணுவ விமானங்களின் மிகத் தொலைதூர இலக்கு இந்தியா தான். டெக்சாஸ், எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட குடியேறிகளை நாடு கடத்துவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, இராணுவ விமானங்கள் குவாத்தமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸுக்கு குடியேறிகளை அனுப்பி வைத்துள்ளன.

குடியேற்றம் குறித்த அவசர அறிவிப்பின் ஒரு பகுதியாக டிரம்ப் கடந்த வாரம் நாடுகடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இதுவரை லத்தீன் அமெரிக்காவிற்கு ஆறு விமானங்கள் புறப்படுள்ளன. இதில் நான்கு மட்டுமே குவாத்தமாலாவில் தரையிறங்கியது. இரண்டு அமெரிக்க C-17 சரக்கு விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்க மறுத்தது. பிறகு, டிரம்புடனான மோதலைத் தொடர்ந்து குடியேறிகளை அழைத்துச் செல்ல அதன் சொந்த விமானங்களை அனுப்பியது.

"வரலாற்றில் முதல் முறையாக, சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து, இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புகிறோம்," என்று டிரம்ப் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News