புதுச்சேரி

கபடி போட்டிக்கு செல்லும் மாணவிகளுக்கு சீருடைய வழங்கும் காட்சி.

பாட்னாவில் கபடி போட்டி-புதுவை அணி பங்கேற்பு

Published On 2022-08-30 15:13 IST   |   Update On 2022-08-30 15:13:00 IST
  • பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்டலிபுத்திரா விளையாட்டு மைதானத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 4-8வது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி நடக்கிறது.
  • 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் புதுவை மாநில மகளிர் கபடி அணியை சேர்ந்த ஆரோக்கியமேரி, வித்யா பங்கேற்று விளையாடுகின்றனர்.

புதுச்சேரி:

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்டலிபுத்திரா விளையாட்டு மைதானத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 4-8வது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி நடக்கிறது.

20 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் புதுவை மாநில மகளிர் கபடி அணியை சேர்ந்த ஆரோக்கியமேரி, வித்யா, சிவசங்கரி, பவித்ரா, பரிமளா, ராகவி, பார்கவி, ஜீவிதா, பிரியதர்ஷினி, நர்மதா, அல்போன்சா மற்றும் அபர்ணா ஆகிய 12 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.

வழியனுப்பு நிகழ்ச்சியில் புதுவை மாநில கபடி சங்கத் தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், தலைமை செயல் அதிகாரி ஆரியசாமி, கன்வீனர் வீரபாகு, செயற்குழு உறுப்பினர் பூபாலன், பயிற்சியாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணிக்கு சீருடைகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News