வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய காட்சி.
ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
- ஜிப்மர் டீன் வழங்கினார்
- ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
புதுச்சேரி:
உலக ரத்த கொடை தினத்தை முன்னிட்டு ஜிப்மர் ரத்த வங்கி சார்பில் ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் ரத்தக்கொடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரங்கோலிகள் போடப்பட்டன.
புதுவை மாநில என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் அலமேலு மங்கை ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த ரங்கோலிகளை தேர்வு செய்தனர்.
சிறந்த ரங்கோலிக்கான முதல் பரிசை ஜிப்மர் செவிலிய அதிகாரிகள் சியாமளாதேவி - மாலதி அணியும், 2-வது பரிசினை ஓவியர்கள் அறிவழகி- ஞானவேல் அணியும் 3-ம் பரிசினை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விஜய விவேஷ்குமார்-விஜய விஜேஷ்குமார் அணி மற்றும் நந்தினி- அக்ஷ்யா அணியும் வென்றனர்.
ஜிப்மர் டீன் டாக்டர் பங்கச் குந்த்ரா, புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர், ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை முதன்மை மருத்துவ அதிகாரி வடிவேல் மற்றும் ஜிப்மர் ஊழியர்கள் செய்திருந்தனர்.