search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம்.
    • வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

    புதுடெல்லி:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பள்ளி யின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து மோடி எக்ஸ் வலைதளத்தில் கூறும் போது, காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன்.

    இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

    மற்றொரு பதிவில், இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியாவை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வ தற்கான முக்கிய முயற்சி யாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து டெல்லியில் விக்யான் பவனில் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் தூய்மை இந்தியா பணியை தங்கள் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, தூய்மை இந்தியா திட்டம் நினைவு கூரப்படும்.

    இந்த நூற்றாண்டில், தூய்மை இந்தியா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரம் என்பது தூய்மை இயக்கம் மட்டுமல்ல, செழுமைக்கான புதிய பாதையாகும். தொடர் முயற்சிகள் மூலம் இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும்.

    பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என்றார்.


    காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5,858.60 கோடியை விடுவித்து உள்ளது.
    • மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடியும் ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடியும் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியது.

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழையினால் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5,858.60 கோடியை விடுவித்து உள்ளது.

    அதன்படி, மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடி, ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடி, அசாமிற்கு ரூ.716 கோடி, பீகாருக்கு ரூ.655.6 கோடி, குஜராத்துக்கு ரூ.600 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடி, தெலங்கானாவிற்கு ரூ.416.8 கோடி, இமாச்சலப்பிரதேசத்துக்கு ரூ.189.2 கோடி, கேரளாவிற்கு ரூ.145.6 கோடி, மணிப்பூருக்கு ரூ.50 கோடி, திரிபுராவுக்கு ரூ.25 கோடி, சிக்கிமுக்கு ரூ.23.6 கோடி, மிசோராமிற்கு ரூ.21.6 கோடி, நாகாலாந்துக்கு ரூ.19.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கேரளா அரசு 2000 கோடி நிவாரண தொகை கூறியிருந்த நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.145.6 கோடி மட்டும் தான் ஒதுக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின்படி, 21 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டில் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.9,044.80 கோடியும், மத்திய நிதியிலிருந்து ரூ.4,528.66 கோடியும், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும் அடங்கும். இதில், வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி நிதியை விடுவித்துள்ளது.

    • இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் காலை முதலே நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அவ்வகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    • இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.
    • பிரதமர் மோடி, இது போருக்கான சகாப்தம் இல்லை என்று சொன்னதை நாங்களும் நம்புகிறோம்

    இஸ்ரேலின் போர்கள் 

    பால்ஸ்தீனத்தில் இஸ்ரேல் கடந்த 11 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாலஸ்தீன விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அமரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் எச்சரிக்கையால் அமைதி காத்து வந்தது. ஆனால் தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1500 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பொறுமையிழந்த ஈரான் 

    காசாவைப் போன்ற சூழல் லெபனானிலும் உருவாகி வரும் நிலையில் ஈரான் பொறுமையை இழந்து இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம், லெபனானில் போர் சூழல் இந்த தாக்குதலுக்கு உடனடி காரணம் என்றாலும் பாலஸ்தீன போர் தொடங்கியதில் இருந்தே ஈரான் இஸ்ரேலை தாக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களை அதன் அரசிடம் இருந்து தாங்கள் காப்பாற்றுவோம் என்று வீடியோ மூலம் பேசியதும் இந்த உடனடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் முதல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உட்பட பல்வேறு இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

     

    சியோனிச அடாவடித்தனம் 

    இந்த தாக்குதல் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் ஆளும் சீர்திருத்தக் கட்சி அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக்காகவும், அமைதியை நிலைநாட்டவும் சியோனிச வல்லாதிக்கத்தை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதிலாக ஈரானின் தாக்குதலை அதிபர் பெசஸ்கியார் வர்ணித்துள்ளார்.

     

    அமெரிக்கா- ரஷியா 

    இதற்கிடையே இஸ்ரேலின் பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தை அந்நாட்டின் அதிபர் முடுக்கி விட்டுள்ளார். இஸ்ரேலின் லெபனான் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வந்த ரஷியா, தற்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசின் தோல்வியே காரணம் என்று தெரிவித்துள்ளது.

    புது டெல்லி 

    ஈரான் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி டெல்லியில் வைத்து பேசியுள்ளார். அவர் கூறியாவது, எங்கள் நாடு மீண்டும் இஸ்ரேலைத் தாக்கும். தற்போதைய தாக்குதல் பழிக்குப்பழி நடவடிக்கை ஆகும். மத்திய கிழக்கில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தெற்காசிய விரோத செயல்களைப் பார்த்து வருகிறது. காசாவிலும் தெற்கு லெபனானிலும் ரத்தம் சிந்தப்படுத்தவை உலகம் பார்த்து வருகிறது. மக்கள் கோபத்தில் உள்ளனர். மனித உரிமை ஒப்பந்தங்களையும் சர்வதேச சட்டங்களையும் இஸ்ரேல் மீறிவிட்டது. அந்நாட்டின் பிரதமர் நேதன்யாகு 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

     

    ஒரு உதவி 

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செயல்களுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இஸ்ரேலுடன் இந்தியா நல்ல உறவைப் பேணுகிறது. பிரதமர் மோடியும் இது போருக்கான சகாப்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

     

    ஈரான் அதைத்தான் நம்புகிறது. ஆனால் நாட்டின் இறைத்தன்மையை ம மற்றொருநாடு மீறும்போது என்ன செய்ய முடியும். எனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டுக்கும் நெருக்கமாக உள்ள இந்தியா, இஸ்ரேலுடன் பேசி அவர்களின் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரான் தங்கள் மீது தங்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்ட்டது, அதற்கான விலையை ஈரான் செலுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.
    • கைது செய்யப்பட்டவர்களின் இருந்து ரூ.27,000 பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சமூக ஊடகங்களில் தன்னுடன் நட்பாகப் பழகிய சிலர் தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    அவரது புகாரில், 3 பேர் தன்னை ஹிப்னாடிசம் செய்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 98,000 பணத்தை மாற்றி மோசடி செய்தாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வினய் (24), நவீன் (24), ரோஹித் (24), ஆகாஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் இருந்து ரூ.27,000 பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    • ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் நேற்று இந்தியா வந்தார்.
    • அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம், கலாசார பரிமாற்றம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு என இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜமைக்கா பிரதமர் புகைப்படம் ஒன்றை பரிசளித்தார். அதில், கடந்த 2000-ம் ஆண்டு மாண்டிகோ பேவில் பயணம் செய்து இந்திய வம்சாவளியினருடன் பேசியதை நினைவு கூரப்பட்டது.

    அதற்கு பதிலாக பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பு நிகழ்ச்சியில் கிறிஸ் கெயில் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.

    ஜமைக்கா பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிக்கிறது
    • அது குருதுவாராவாக, மசூதியாக, இந்து கோவிலாக எதுவாக இருந்தாலும் ஒன்றுதான்

    மதத் தளங்களை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அசாம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    இதுதொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதின்மன்றதால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நேற்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்ஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதிபர் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நோடீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது [நீதிபதிகளது] பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும், நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.

    நடு ரோட்டில் ஒரு மதத் தளம் இருக்குமாயின், அது குருதுவாரா [சீக்கியர்களின் புனித கோவில்] ஆக இருந்தாலும் மசூதியாகி இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்த்தோ இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

    • நேற்று இரவு டெல்லியை நெருங்கும்போது சிங்கு [Singhu] எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • டெல்லியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரபல சூழலியல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் உட்பட தலைநகர் டெல்லியை நோக்கி லடாக்கில் இருந்து பாதயாத்திரை பேரணியாக டெல்லியை நோக்கி வந்த 120 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    லாடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பு மற்றும் சுயேச்சை உறுதி செய்ய அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது அட்டவணையில் லடாக்கினை சேர்க்க வேண்டும், மத்திய அரசு லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்திவரும் சோனம் வாங்சுக் லடாக் மக்கள் ஆதரவுடன் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பாதயாத்திரை தொடங்கிய வாங்சுக் நாளை [அக்டோபர் 2] காந்தி ஜெயந்தி அன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பேரணியை மமடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நேற்று இரவு டெல்லியை நெருங்கும்போது சிங்கு [Singhu] எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்த 120லடாக் போராளிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம் .. தடை உத்தரவு அமல் - ராகுல் கண்டனம்

     உடன் அவர் தடுப்புக்காவலில் வைகைப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாங்சுக் மற்றும் நூற்றுக்கணக்கான லடாக்கியர்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். லடாக்கின் எதிர்காலத்திற்காக போராடினார்கள் என்பதற்காக ஏன் முதியவர்களையும் காவலில் வைத்துளீர்கள் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, விவசாயிகள் எப்படி தங்களின் போராட்டம் மூலம் மோடியின் சக்கவியூகத்தை உடைத்தார்களோ அதே போல மீண்டும் அது உடையும், உங்களின் அகந்தையும்தான், லடாக்கின் குரலுக்கு நீங்கள் செவி சாய்த்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
    • ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

    ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்கள், பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
    • மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் 15.66% தொழிற்சாலைகல் உள்ளன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத் (12.25%), மகாராஷ்டிரா (10.44%), உத்தரப்பிரதேசம் (7.54%), ஆந்திரப்பிரதேசம் (6.51%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 15% தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (12.84%), குஜராத் (12.62%), உத்தரப்பிரதேசம் (8.04%), கர்நாடகா (6.58%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

     

    • 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது.
    • வறுமையால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவரது பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை

    தான்பாத் ஐஐடி-யில் படிக்க இடம் கிடைத்து, வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்தாததால் சேர்க்கை மறுக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வறுமை காரணமாக கல்விக் கட்டணமாக கட்டவேண்டிய ரூ.17,500 பணத்தை ஜூன் 24ஆம் தேதிக்குள் கட்ட அவரது பெற்றோர் தவறியதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.சி. எஸ்.டி ஆணையம் என எங்கும் தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை அம்மாணவனின் தந்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கில், இவ்வளவு திறமையான மாணவன் படிப்பை கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

    அதுல் குமாரை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் சேர்க்குமாறு தன்பாத் ஐஐடியிடம் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

    • அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை அமலில் உள்ளது
    • நாட்டின் குடிமக்களுக்கு உறைவிடமும் வாழ்வாதாராமும் மறுக்கப்படுவது அடிப்படை உரிமையை மீறும் செயல்

    உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை மீறி ஆங்காங்கே புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் தாராவி பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்று அங்கிருந்த மசூதியை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கிளம்பினர். ஆனால் தாராவி மக்கள் பெரிய அளவிலான போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

    இதற்கிடையே அசாமில் காம்ரூப் [Kamrup] மாவட்டத்தில் கட்சுதொலி பதார் [ Kachutoli Pathar] கிராமத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. ஆனால் அந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் பல வருடங்களுக்கு முன்பே அனுமதி பெற்றுத்தான் தாங்கள் அங்கு வசித்து வருகிறோம் என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காம்ரூப் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அதே போல மக்கள் வசிக்கும் வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளன.

    எனவே வீடுகளை இழந்த கட்சுதொலி பதார் கிராமத்தை சேர்ந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் இருப்பதற்கான இடத்தையும், வாழ்வாதாரத்தையும் மறுப்பது சட்டப்பிரிவு 14, 15, 21 ஆகியவற்றின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

    ×