என் மலர்
நேபாளம்
- தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர்.
- காம்யா என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
ஆனால் தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்
மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான அவர் மே 12 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் 3 முறை எவரெஸ்ட் சிகரத்தில் எறியுள்ளார்.
எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவது மிகவும் சிரமமானது. சிலரால் மட்டும் தான் இந்த சாதனையை படைக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது தினமும் இந்த சாதனையை பலர் படைத்தது வருகின்றனர்.
இதற்கு காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எண்ணற்றோர் ஆர்வம் காட்டுவதும் தான்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
- பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும்.
- 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்.
பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீட்டர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார். அடுத்ததாக நேற்று காலை 5:50 மணிக்கு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.
பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
- தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
காத்மண்டு:
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது
எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்துள்ளார்.
- ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது.
- ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
காத்மாண்டு:
நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதன் காரணமாக துணை பிரதமராக பதவி வகித்து வந்த கூட்டணி கட்சி தலைவர் உபேந்திரா யாதவ் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியையும் தொடங்கினார்.
இதனால் ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி பேற வேண்டிய கட்டாயத்தில் பிரசந்தாவின் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில் நேற்று நேபாள நாடாளுமன்றத்தில் பிரசந்தா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
- நேபாளத்தில் நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் பிரதமர் பிரசந்தா.
- பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 4-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.
காத்மாண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் உள்ள உபேந்திர யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு மே 13 அன்று பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெற்றது.
இந்நிலையில், நேபாளத்தில் நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார் பிரதமர் பிரசந்தா. மே 20 அன்று பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரசந்தா பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.
- ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
- 23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
2022ம் ஆண்டு ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மாண்டு நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது
23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது
எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
- துணை பிரதமர் வெளியேறியபோதும் பிரசந்தா தலைமையிலான அரசுக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.
காத்மண்டு:
நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி-என்) கட்சியில் உட்கட்சி பிரச்சனையால் கட்சி இரண்டாக உடைந்தது.
கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கியது. அதன்பின் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தனர். தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவுசெய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறினார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசந்தா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும் தற்போது கூட்டணி ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.
- அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம்.
- பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க ட்ரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.
நேபாளம் தலைநகர் காத்மாண்டு மற்றும் நாடு முழுவதும் உள்ள மலைப்பாங்கான மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
இருப்பினும், நாட்டின் தெற்கு சமவெளிப் பகுதியான தேரையில், ஹோலி திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. நேபாள ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, " ஹோலி "சமூகத்தில் பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நேபாள மக்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கான தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி பௌடெல், ஹோலி பண்டிகையை "அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம்" என்று விவரித்தார்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேபாள போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளத்தாக்கில் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க ட்ரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ஹோலி பண்டிகையின்போது போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சுமார் 100 இடங்களில் வாகன சோதனையை படை தொடங்கியது.
அனுமதியின்றி யாரேனும் மக்கள் மீது வண்ணங்களை தெளித்தோ அல்லது தண்ணீரை வீசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு போக்குவரத்து காவல்துறை அலுவலகம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக குறைந்தது 250 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
- நேபாள பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- மொத்தமுள்ள 268 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 157 வாக்குகள் பதிவாகின.
காத்மாண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
அரசியலமைப்பு விதிகளின்படி எந்தவொரு கூட்டணி கட்சியும் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற பிறகு 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே, வரும் 13-ம் தேதி பாராளுமன்றம் கூடும்போது, பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்டாயம் அவையில் இருக்கவேண்டும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், நேபாள பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 268 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 157 வாக்குகளும், அவருக்கு எதிராக 110 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றுள்ளார்.
பிரசந்தா பிரதமர் ஆன பிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய நேபாளம் அணி 184 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நெதர்லாந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
காத்மண்டு:
நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நேபாளத்தில் நடைபெற்றது.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. ஆசிப் ஷேக் 47 ரன்னும், குல்சன் ஜா 34 ரன்னும் எடுத்தனர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் லெவிட் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். சைப்ரண்ட் 48 ரன்னில் அவுட்டானார்.
இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. லெவிட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
- மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன
- 1953ல் இருந்து சுமார் 300 பேர் மலையேறும் முயற்சியில் உயிரிழந்துள்ளனர்
இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், மவுன்ட் எவரெஸ்ட் (Mount Everest).
இதன் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி).
மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம்.
1953ல் இருந்து சுமார் 300 பேர் இந்த முயற்சியில் உயிரிழந்துள்ளனர்.
எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், "எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு "சிப்" அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்" என தெரிவித்தார்.
2023ல் ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்தது.
- நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்.
காத்மாண்டு:
நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபால் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (67), உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
பஸ் ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.