search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் பலி
    X

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் பலி

    • 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன் (46) என்பவர் இன்று அதிகாலை 3.30-மணிக்கு இறந்துவிட்டார்.

    இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), கருணாபுரம் ரவி (44), சங்கராபுரம் மனோஜ்குமார் (21), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), நாகலூர் சண்முகம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), கோட்டைமேடு பார்த்திபன் (27), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணி வண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிவண்ணன், (60), கார்த்திக்கேயன் (36) , விளான்தாங்கல் ரோடு நசீர் (53), முடியலூர் சாமிதுரை, சங்கராபுரம் சாமுண்டி (70), மாரிமுத்து (55) ஆகிய 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×