என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது.
    • ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் நேற்று இரவு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள்விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறும் போது, அந்தியூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது சில துரோகிகளால் நாம் வெற்றியை இழந்தோம் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பகுதியில் கால்நடை மருத்துவமனை, நாய்கள் பராமரிப்பு விடுதி மற்றும் இனப்பெருக்க தடுப்பு மையம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அந்தியூர் சட்டசபை தொகுதியில் சேவல் இரட்டை இலை சின்னத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது. சில பேர் செய்த துரோகத்தால் நாம் தோல்வி அடைந்தோம். அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். துரோகம் என்ற வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.

    அப்போது பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிட வில்லையே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,

    நேற்று முன்தினம் கோபி அருகே நடந்த பொதுக்கூட்டத்திலும், நேற்று இரவு அந்தியூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்திலும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும் என்று அழுத்தமாக கூறினேன் என்றார். அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகை வசூல்.
    • அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வசூலிப்பதாக புகார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பைக் மற்றும் கார்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்பவர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டனம் வசூலிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    கோவிலுக்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக 10 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும் வசூலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஏலம் எடுத்துள்ளவர்கள் பைக்களுக்கு வழங்க வேண்டிய டோக்கனில் உள்ள கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகையை எவ்வித அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வரும் பக்தர்களிடம் வசூல் செய்வதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூடுதல் கட்டண வசூலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் மீது மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
    • பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான அந்த பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூரில் இருந்து பெருந்துறை சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து பணியாளர்கள் சிமெண்ட் லோடு இறக்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினர்.

    பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

    இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

    எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.

    எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.

    இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.
    • எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

    விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது:-

    அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள்.

    அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை.

    அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

    எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.

    எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

    எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

    அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்.

    அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான்.
    • நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

    யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார். பின்னர் அ.தி.மு.க நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

    கோபி:

    அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அக்கட்சி யில் பல்வேறு பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும்.

    தற்போது கே.ஏ.செங் கோட்டையன் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய லாளராகவும் இருந்து வருகிறார்.

    சமீப காலமாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வந்த நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 9-ந் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது கடும் சர்ச்சையானது.

    இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக கூறப்பட்டது.

    இதற்கு விளக்கம் அளித்து கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள், பேனர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.

    இந்த திட்டத்திற்கு முதல் முதலாக நிதியை ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். இதனால் தான் அந்த பாராட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை. புறக்கணிக்கவில்லை என்று சொல்வதைவிட எனது உணர்வுகளை வெளிப்படுத்தினேன் என்றார்.

    இந்நிலையில் நேற்று இரவு கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டில் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது வீட்டில் நுழைவாயில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இது குறித்து விசாரித்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு செங்கோட்டையன் வீட்டுக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு கே.ஏ.செங்கோட்டையன் திடீரென கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு அவர் அங்கேயே தங்கி விட்டார்.

    இதுகுறித்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறும்போது, நேற்று இரவு செங்கோட்டையன் கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். கோவையில் அவரது மகன் குடும்பத்துடன் வசித்து வருவதால் அவர் வீட்டில் தங்கி இருக்கலாம் என்றனர்.

    மேலும் இன்று மாலை கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அவர் நிச்சயமாக பங்கேற்பார் என்றனர்.

    இதனால் அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட் டையன் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொது கூட்டத்தில் பங்கேற்பாரா? என உறுதியான தகவல் தெரிய வில்லை. அவ்வாறு அவர் பங்கேற்றால் என்ன பேசப் போகிறார்? என கட்சியினர் இடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியுள்ளது.

    இன்று 2-வது நாளாக செங்கோட்டையன் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செங்கோட்டையன் வீட்டுக்கு வருபவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக அவர் வீட்டுக்கு செல்கிறீர்கள்? போன்ற விவரங்களை சேகரித்து அதன் பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டி பாளையம், அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன் குவிந்தனர்.

    முதலில் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

    அதன் பின்னர் தற்போது வீட்டின் கேட் திறக்கப்பட்டு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையன் இன்று மதியம் வீட்டுக்கு வருவதாக வந்த தகவலை அடுத்து ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு முன்பு திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
    • சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.

    சபாநாயகர் அறையில் முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா.
    • 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை என்று கூறினார். 

    • சந்திரகுமாரை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 45 பேர் டெபாசிட் இழந்தனர்.
    • ஈரோட்டில் தி.மு.க. கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு பிறகு உருவானது. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதன் முதலில் தேர்தல் நடைபெற்றது.

    2011ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் வி.சி.சந்திரகுமார் (தற்போதைய தி.மு.க வேட்பாளர்) போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் முத்துசாமி (தற்போதைய தி.மு.க. அமைச்சர்) போட்டியிட்டார். அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் மொத்தம் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார்.

    இதில் வி.சி.சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார். அதன் பிறகு தே.மு.தி.க தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியை விட்டுப் பிரிந்து தி.மு.க.வில் சந்திரகுமார் இணைந்தார்.

    அதன் பிறகு 2016ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றார்.

    தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 7 ஆயிரத்து 794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க கூட்ட ணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திருமகன் ஈவேரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யுவராஜா 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றார்.

    இதனால் திருமகன் ஈவேரா 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார். இதன் பிறகு திருமகன் ஈவேரா மரணத்தை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகள் பெற்றார். இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்கு வித் தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    இந்நிலையில் இளங்கோவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் கடந்த 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த முறை தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமியும் போட்டியிட்டனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சி தேர்தலை புறக்கணித்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24 ஆயிரத்து 151 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தேர்தலில் சந்திரகுமாரை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 45 பேர் டெபாசிட் இழந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் ஈரோட்டில் தி.மு.க. கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த தேர்தல் முடிவு, வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக இருப்பதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.

    • போலீசார் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.
    • பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி மார்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 45), பாஸ்கர் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு மார்கெட்டுக்கு லாரியில் தக்காளி கொண்டு வந்தனர்.

    பின்னர் அவற்றை இறக்கிவிட்டு, மார்கெட் அருகில் உள்ள ஏ.பி.டி.ரோடு பகுதியில் தங்களது லாரியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு விட்டு லாரியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு சென்ற 4 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கர்ரெட்டி இருவரையும் எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

    அப்போது லாரி டிரைவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கூறவே, கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பவைத்து, பின்னர் மகேந்திரனின் செல்போனில் இருந்து கூகுள் பே ஆப்பையும் அழித்துவிட்டு சென்று விட்டனர்.

    இதையடுத்து, மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி இருவரும் தாங்கள் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளர் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுனர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன் சத்திரம், மிட்டாய்காரர் வீதியை சேர்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்த்து. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×