search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    • தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள 37000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க அறிவுறுத்தியுள்ளது.

    • கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

    சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.
    • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

    முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி, வருவாய் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதன்பின், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார். மேலும் கருணாபுரம் பகுதிக்கும் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.

    • கள்ளச்சாராய விவகாரத்தில் கைதான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • பாதிக்கப்பட்டவர்களால் கைதானவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 47 உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் கைதான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட நீதிமன்றம் கருணாபுரம் பகுதியில் அமைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களால் கைதானவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோருக்கு ஜூலை 5-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    இதனிடையே, மெத்தனால் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருதால் . சின்னதுரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளக்குறிச்சி, ஜிப்மர், சேலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக 165 பேர் சேர்ந்தனர். இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    * சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * 29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    * அரசு அறிவித்த நிவாரணம் உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் இன்று நிவாரணம் வழங்கப்படும்.

    * பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * பார்வை குறைபாட்டுடன் வந்த 99 சதவீத நோயாளிகள் குணமடைந்து விட்டனர்.

    * கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    * கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரவேண்டும். சாராயம் அருந்திவிட்டோமோ என்ற சந்தேகம் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.

    • 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதி.
    • அரசியல் தலைவர்கள் கள்ளக்குறிச்சி விரைந்தனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த இரு நாட்களாக கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் மற்றும் பலர் கள்ளக்குறிச்சி விரைந்தனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோகை சந்தித்து உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
    • சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு கள்ளக்குறுச்சி வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    இவர்களை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    • கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில், சாராயம் விற்பனை செய்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சாராய வியாபாரி சின்ன துரையை கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு வருகை தந்துள்ளார்.

    அங்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.

    இரவு 8 மணிக்குள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்றடைவார் என தகவல் வெளியான நிலையில், விஜய் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

    சம்பவம் குறித்து காலை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் நேரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையை தொடர்ந்து, கருணாபுரம் கிராமத்திற்கும் விஜய் செல்லயிருப்பதாக கூறப்படுகிறது.

    • கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது.

    தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:

    தமிழகத்தில் சாராயம் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடந்தபோது இந்த மரணம் விஷ சாராயத்தின் கடைசி மரணம் என்றார் முதல்வர்.

    மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    மதுவை ஒழிப்போம் என்றார்கள், ஆனால் டாஸ்மாக் கடையில் வியாபாரம் அதிகரித்து வருகிறது.

    உடனடியாக 1000 டாஸ்மாக் கடைகளை நாளைய தினமே மூட அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை. பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் சந்தித்திருக வேண்டும்.

    விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷ சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது.

    விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை.

    விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.

    குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் விஷ சாராய உயிரிழப்பு நடக்கவில்லை; நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. சார்பில் முடிந்தவரை தேவையான உதவிகளை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

    • இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
    • சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.

    கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

    தொரடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருணாபுரம் கிராமத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

    அங்கு, உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    261 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைகளை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உள்துறை செயலாளர், டிஜிபி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாரத்திற்கு உதவிகள் வழங்கப்படும்.

    நேற்று முதல் 132 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    கள்ளச்சாராயம் எப்போதும் இருக்க கூடாது என்பது தான் அரசின் நோக்கம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உரிய விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பது உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு.
    • அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ×