search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.

    வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதன் காரணமாக ஆல்-ரவுண்டர் வீரரான லியம் லிவிங்ஸ்டன் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு லிவிங்ஸ்டன் முக்கிய காரணமாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார். 

    • இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
    • இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.

    இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர்.

    இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.
    • ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ரவிசந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    அந்த வகையில், ரவிசந்திரன் அஸ்வின் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார். 37 வயதான அஸ்வின் ஓய்வு பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய அஸ்வின் அவர் கூறுகையில், "ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்."

    "எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது. வயதாகும்போது கூடுதல் முயற்சி, பயிற்சி தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன்."

    "எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்," என்று தெரிவித்தார்.

    • விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா?
    • எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது.

    பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி எனது கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு பேசியுள்ளார்.

    ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா? நான் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். எனது இரண்டு தசைநார்களில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது" என்று தெரிவித்தார்.

    தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலியும் தேஜஸ்வி யாதவும் ஜூனியர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆட்டங்களில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி சட்டையுடன் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • 3ம் நாள் முடிவில் இந்தியா பி அணி 309 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் அபிமன்யு சதமடித்து ஆடி வருகிறார்.

    ஐதராபாத்:

    துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். மனவ் சுதார் 82 ரன், பாபா இந்திரஜித் 78 ரன், கெய்க்வாட் 58 ரன், ரஜத் படிதார் 40 ரன், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜெகதீசன் 70 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அபிமன்யு பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரதம் சிங் சதமடித்து 122 ரன்னும், மயங்க் அகர்வால் 56 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். திலக் வர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்து 111 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 64 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 486 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா டி அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா டி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் 426 ரன்கள் எடுத்தால் இந்தியா டி அணி வெற்றி பெறும்.

    • சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.
    • சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ந்தேதி இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் ஜூரெல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    வங்கதேச அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இடம் பிடித்துள்ளார். இவர் சர்பராஸ் கானுக்கு பதிலாக களம் இறக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில் "உண்மையிலேயே, சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.

    ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியதால் ஜூரெல் அணியில் இருந்து வெளியேறுவதை பார்க்க முடியும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களை நீங்கள் மனதில் வைத்து பார்க்கும், கே.எல். ராகுல் அங்கே இருப்பார். ஆஸ்திரேலியாவில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார்.

    சர்பராஸ் கான் இந்திய அணிக்காக ஐந்து இன்னிங்சில் போட்டிங் செய்து 200 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50 ஆகும். ஸ்டிரைக் ரேட் 79.36 வைத்துள்ளார்.

    • நான் விராட் கோலியை ஒன்று அல்லது இரண்டு முறை வீழ்த்தியிருப்பேன்.
    • அவரும் என்னுடைய பந்தில் ரன்கள் அடித்திருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது ஸ்லெட்ஜிங்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் நாட்டிற்கு விளையாட வரும் வீரர்களுடன் கடுமையான வகையில் வார்த்தைப்போரில் ஈடுபடுவது உண்டு.

    இந்திய அணி அவர்களுக்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுப்பார்கள். இதனால் இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். விராட் கோலி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் களத்தில் நேருக்கு நேர் மோதும்போது அனல் பறக்கும்.

    இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி உடனான சண்டையை ரசிப்பேன் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டார்க் கூறுகையில் "விராட் கோலியுடனான சண்டையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஏராளமான கிரிக்கெட்டுகள் விளையாடியுள்ளோம். நான் எப்போதும் நல்ல வார்த்தைப்போர் ஈடுபடுவது உண்டு. நான் உண்மையிலேயே அவரை ஒன்று அல்லது இருமுறை வீழ்த்தியிருப்பேன். எனக்கு எதிராக அவரும் ரன்கள் அடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமம் இல்லை. ஆகவே, இது சிறந்த போட்டியாக இருக்கும். இருவரும் ரசிக்கிறோம்" என்றார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முறை எப்படியாவது தொடரை கைப்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய இங்கிலாந்து 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

    கார்டிப்:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னும், டிராவிஸ் ஹெட் 31 ரன்னும், மேத்யூ ஷாட் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிலிப் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய லிவிங்ஸ்டோன் அரை சதமடித்தார். அவர் 47 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில் இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷாட் 5 விக்கெட்டும், சீன் அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கார்டிப்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாட் 28 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.

    அடுத்து இறங்கிய ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா சி அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயத்தால் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரஜத் படிதார் சாய் சுதர்சனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். படிதார் 40 ரன்னும், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    கடைசி கட்டத்தில் அணியில் இணைந்த இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் அரை சதமடித்து 78 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்க்கு 357 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. கெய்க்வாட், மனவ் சுதார் இருவரும் அரை சதம் கடந்தனர். கெய்க்வாட் 58 ரன்னும், மனவ் சுதார்82 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 222 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா அணி வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 19-ந் தேதி தொடங்குகிறது.
    • டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.

    இந்தியா- வங்கதேசம் அணிகள் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி சென்னைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக ராதிகா சரத்குமாரின் எக்ஸ் தள பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்ஃபிக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×