என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முதல்முறையாக ஜனநாயக கடமையாற்றுவது மகிழ்ச்சி: கல்லூரி மாணவி பெருமிதம்
- கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
- இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமனம்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 19) என்பவர் தெரிவிக்கையில்,
நான் அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் வாக்களிக்க செல்வதாக கூறி விட்டு செல்லும்போது நாமும் எப்போது வாக்களிக்க செல்வோம் என மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்தேன்.
தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. அதனை முறையாக நிறைவேற்ற வேண்டும். அந்த வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைப்பது அரிது.
இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே நமக்கு கிடைத்த ஜனநாயக கடமையை தேர்தலை புறக்கணிக்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்