search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபையில் இருந்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
    X

    சட்டசபையில் இருந்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

    • பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை தெரிவித்தார்.
    • உங்களுக்கு தேவையான அளவுக்கு ஏற்கனவே வாய்ப்புகள் தந்துள்ளேன்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று இறுதி நாள் கூட்டம் என்பதால் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் கொடுத்திருந்த முக்கிய பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசினார்கள். அதில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சில கருத்துகளையும் கூறினார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. தனது கருத்தை சபையில் பதிய வைக்க எழுந்து நீண்ட நேரம் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், உங்களுக்கு தேவையான அளவுக்கு ஏற்கனவே வாய்ப்புகள் தந்துள்ளேன். நீங்கள் பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். இதை தொடர்ந்து ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    Next Story
    ×