search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரத்தில் சிற்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது
    X

    மாமல்லபுரத்தில் சிற்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது

    • சி.எஸ்.சி பொது சேவை நிறுவனம் பல இடங்களில் முகாம் அமைத்து இலவசமாக பதிவு செய்து கொடுத்து வருகிறது.
    • மாமல்லபுரத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருமான வரி கட்டாத சிற்பிகள், சாலையோர கடை வியாபாரிகள், பாசி, மணி விற்போர், கூலித்தொழில் செய்வோர் உள்ளிட்ட பலருக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் பதிவு நடை பெற்றது.

    உச்சநீதிமன்றம் ஆணையின் படி வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் பதிவுகளை முடிக்கும் நிலை உள்ளதால் சி.எஸ்.சி பொது சேவை நிறுவனம் பல இடங்களில் முகாம் அமைத்து இலவசமாக பதிவு செய்து கொடுத்து வருகிறது.

    இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநில சிற்பிகள், ஓட்டல் தொழிலாளர்கள், நடைபாதை கடை ஊழியர்கள், குதிரை ஓட்டிகள், கடற்கரையில் கேளிக்கை நடத்துவோர், போட்டோ கலைஞர்கள், தள்ளுவண்டி கடை வைத்திருப்போர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

    சிற்பிகள் நலச் சங்கத்தின் நிர்வாகி இளையராஜா மற்றும் சக உறுப்பினர்கள் முன்னின்று நல வாரியத்தின் பதிவு பணிகளை கவனித்து வருகிறார்கள். இதனால் மாமல்லபுரத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×