search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "r"

    • விஜய் அரசியலில் நுழைந்துள்ளதன் மூலம் த்ரிஷாவும் அரசியலில் நுழைய விரும்புகிறார்.
    • திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் விஜயின் வாழ்க்கையில் நுழைகிறார்கள்.

    சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அண்மையில் சுசித்ரா ளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் குறித்தும் நடிகர் தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    நடிகர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதியில் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர். அதே நாளில் நடிகை த்ரிஷாவும் நடிகர் விஜய்யுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுசித்ரா நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை அவர் ஈகோவினால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள். லிப்டில் அவங்க எடுத்த போட்டோவை பதிவிட்டதில் இருந்து விஜயை திரிஷா சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்கள் என்று தெரிகிறது.

    இதன்மூலம் திரிஷா விஜய்யுடன் இணைய விரும்புவதாகத் தெரிகிறது. ஏனெனில், நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளதன் மூலம் த்ரிஷாவும் அரசியலில் நுழைய விரும்புகிறார்.

    ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஒரு ஒட்டுண்ணி தான். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் யிடம் இருந்து அரசியல் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு அதன்பிறகு எம்.ஜி.ஆரையே ஒதுக்கி விட்டார். திரிஷாவும் ஜெயலலிதா போலவே இருக்க விரும்புகிறார். அதனால் விஜய் திரிஷாவை விட்டு விலகி, அவருடைய மனைவி சங்கீதாவுடன் இணையவேண்டும் என சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

    இப்படி விஜய்யையும் திரிஷாவையும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவோடு அவர் ஒப்பிட்டு பேசி இருப்பது சமூக வலைதளத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது
    • இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிைலயம் பின்புறம் விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.தற்போது அந்த கோவிலில் நடந்து வந்த பணிகள் அனைத்தும் முடிந்து, .கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போரா ட்டத்திலும் ஈடுபட்டனர்.மேலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்திலும், டாஸ்மாக் அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அந்த கடையை மூடினர் . ஆயினும் நேற்று மீண்டும் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. சம்பவம் அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய முத்து நேரில் சென்று பார் ஊழியர்களை எச்சரித்து, அனைவரையும் வெளியேற செய்து பாரை பூட்டிவிட்டு சென்றார்.

    அதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    ×