என் மலர்
நீங்கள் தேடியது "தொடர் விடுமுறை"
- பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
- அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தைப்பூசம், குடியரசுதினம் மற்றும் வார இறுதிநாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகளான மூஞ்சிக்கல், அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இருந்தபோதும் மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காவில் மலர்களையும் அவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
2 மாறுபட்ட சீதோஷ்ண நிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் போதியஅளவு போலீசார் நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள்
- விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக திரும்பினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சுமார் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி கள், தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகள் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக திரும்பினர்.
இக்குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் உற்சாகமாக வரவேற்றனர். காலாண்டு தேர்வு முடிடைந்ததை அடுத்து இன்று இக்கு ழந்தைகளுக்கு 2-ம் கால பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாட புத்தகங்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள். குழந்தை கள் ஆர்வத்துடன் இப்புத்தகங்களை வாங்கி மகிழ்ச்சியுடன் திறந்து பார்த்தனர்.
தமிழ் வழி, ஆங்கிலம் வழி (மெட்ரிக்) ஆகிய பயிற்று மொழிகளில் கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. அதன்படி பாட புத்தகங்கள் தனித்தனியாக தமிழ் பிரிவு, ஆங்கில பிரிவு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
- கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
- சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகனநிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிந்தன.
- மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது
திருப்பூர் :
வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்ற பெருமை திருப்பூருக்கு உண்டு. இங்கு வருகிறவர்களுக்கு உடனுக்குடன் பின்னலாடை நிறுவனங்களில் வேலையும் கிடைத்து விடும். இதனால் திருப்பூருக்கு தினமும் வேலை தேடி பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் எல்லாம் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மற்ற நாட்களில் திருப்பூரில் தங்கியிருப்பார்கள்.
இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பலரும் தங்களத சொந்த ஊர்களுக்கு சென்றனர். 5 நாட்கள் வரை தொடர் விடுமுறை என்பதால், தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதுபோல் வெளியூர்களுக்கு சென்ற பலரும் தங்களது வாகனங்களை பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி சென்றதால், வாகன நிறுத்தும் இடங்களும் நிரம்பி வழிந்தன. இதுபோல் வாகன நிறுத்தும் இடங்களில தரை தளம் சரியாக இல்லாமல் மண் தளமாக இருப்பதால், மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தரைதளங்களை சீரமைத்து சரியான முறையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
- பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை.
புதுச்சேரி:
புதுவையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.
அதோடு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை, கோடை விடுமுறையிலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள், இந்த ஆண்டு சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என விடுமுறை விடப்பட்டது.
இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அண்டை மாநிலம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர்.
இதனால், மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, படகுத்துறை, பூங்காக்கள், அரவிந்தர் ஆசிரம்,பிரெஞ்சு குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.
பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விடுதி அறைகள் கிடைத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டுகள் அனைத்தும் நிரம்பியது.
இதனால் பல சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் தவித்தனர். புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு படையெடுத்தனர். இன்னும் சிலர் புதுவையில் தங்க முடியாமல் அருகிலுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூரில் தங்கி புதுவைக்கு வந்தனர்.
- காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்தது.
- தங்களது வகுப்பு ஆசிரியர், ஆசிரியை களுக்கு நன்றி செலுத்தியும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சேலம்:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியது. இன்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்தது.
பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் இன்றுடன் தேர்வு அனைத்தும் நிறைவு பெற்றன.இதையடுத்து நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளியில் துள்ளிக்குதித்து ஆரவாரத்துடன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பள்ளி குழந்தைகள் ஒருவருக்கொருவர் டாட்டா காண்பித்தும், தங்களது வகுப்பு ஆசிரியர், ஆசிரியை களுக்கு நன்றி செலுத்தியும் வீட்டுக்கு புறப்பட்டனர்.6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து அக்டோபர் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம்கட்ட பயிற்சி நடைபெற உள்ளதால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
- இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
- தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
ஓசூரில் நேற்றிரவு லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது.
இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
மழைநீர் தேங்கியதால் ஓசூர் பஸ்நிலையம் குளம்போல் காட்சி அளிக்கிறது.
இதே போல நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதே போல் தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓசூர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- விவேகானந்தர் மண்டபத்தை ஒரேநாளில் 6 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
- படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுதந்திர தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அவர்களை கவரும் வகையிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் நினைவு இல்லங்களில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
இதனை ரசித்துப் பார்த்த சுற்றுலா பயணிகள், சூரியன் உதயமாகும் காட்சியையும் பார்த்து மகிழ்ந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தை பார்வையிட்டனர்.
இங்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 310 தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. இதனையும் சுற்றுலா பயணி கள் பார்த்து ரசித்தனர்.
கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 10-30 மணிக்கு பிறகே படகு போக்குவரத்து தொடங்கிய தால் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்து அதன்பிறகு மண்டபத்தை பார்வையிட்டனர்.
நேற்று ஒரே நாளில் விவேகானந்தர் மண்ட பத்தை 6 ஆயித்து 100 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- சென்னை கோய ம்பேடு பஸ் நிலையம் உட்பட பல்வேறு பஸ் நிலை யங்களில் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது.
- இரவு நேரம் சிற்றுண்டிகளில் விற்பனை அதிகமாக இருந்தது.
விழுப்புரம்:
நாடு முழுவதும் 75- வது சுதந்திர தின விழா வருகிற 15-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவிற்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு விடுமுறை அளித்தது போல் வங்கிகள் மற்றும் பிரபல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளது. இந்தத் தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை முதலே புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் உட்பட பல்வேறு பஸ் நிலையங்களில் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. இதே போல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில்வே ஜங்ஷன்களில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.
விழுப்புரம் புதிய பஸ் நிலைய த்தில் பயணிகளின் எ ண்ணிக்கை அதிகமானதால் பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டி அடித்து கொண்டு ஏறினர். மேலும் இந்த தொடர் விடு முறை எதிரொலியாக சென்னை யில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி, சேலம் ,மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊருக்கு ஏராள மான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இரவு முழுவதும் சென்றது. இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இருக்கும் நான்கு சுங்க சாவடிகள் வரை பஸ்களில் கார்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொது மக்களின் நீண்டதூரம் வரிசை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக இருந்தது. மேலும் நேற்று மாலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமானதால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரம் சிற்றுண்டிகளில் விற்பனை அதிகமாக இருந்தது. குறிப்பாக நெடுஞ்சா லைத்துறை சிற்றுண்டிகளில் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை எதிரொலியால் பஸ்,ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இரவு வீசிய குளிர்ந்த காற்று இதமான சூழ்நிலையை ரசித்தபடி பயணிகள் அனை வரும் பஸ்களில் கார்களில் பயணித்தனர்.
- இந்த திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வு நடத்தப்படவுள்ளது.
- இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.
லண்டன்:
இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உட்சபட்ச திறன் வெளிப்படும் என்பதால் 100 சதவீதம் ஊதியம் அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
3 நாட்கள் விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள்.
இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்து வரும் பகுதிகளில், சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டியின்படி இன்று மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #TNRain #SchoolHoliday #RedAlert
லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. #Rain #TamilNaduRain #HolidayForSchools