என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "battery vehicle"
- சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
- எந்திரமும் பயன்படுத்தப்படாமல் முடங்கி ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை ரசிப்பதற்காக தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டினர் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வரும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் கடற்கரை கோவில் வளாகத்தில் இயங்கி வந்தது.
தற்போது இந்த வாகனம் பழுதடைந்து அங்குள்ள வளாகத்தில் பலமாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு
உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி தூளாக்கும் எந்திரம் ஒன்றும் அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எந்திரமும் பயன்படுத்தப்படாமல் முடங்கி ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றகோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பொது நிறுவனங்கள் அதன் சமூக பொறுப்பு நிதியில் பல லட்சம் ரூபாய் செலவில், வாங்கி கொடுக்கும் பொருட்களை தொல்லியல்துறை முறையாக பராமரித்து பயன் படுத்துவது இல்லை. இதனை தொண்டு நிறுவனங்களும் கண்டு கொள்வதில்லை.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் பேட்டரி வாகனம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் எந்திரத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்து.
- அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் இயக்கத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாக னங்கள் வழங்கப்பட்து. அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதூர் தி.மு.க. ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்
ஆரணி:
மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆகாரம், தேவிகாபுரம் தச்சூர், ஓண்ணுபுரம, அப்பநல்லூர், அத்திமலைபட்டு, குன்னத்துர் மலையம்பட்டு ஆகிய 27 ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் மிஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் 42 பேட்டரி வாகனங்கள் குப்பை சேகரிக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் பங்கேற்றார். மேலும் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை சேர்மன் வேலாயுதம், ஓன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு, கீதா மோகன், கீதாசரவணன், ஏழுமலை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, மோகன், ஆகியோர் உடன் இருந்தனர்.
- இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை
- பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது.
01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்