search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conch"

    • துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
    • சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

    பிருந்தா, பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.

    சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    துளசியின் கதை:

    கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.

    இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்துவிட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

    சிறப்பு வாய்ந்த மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.

    • சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.
    • மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடலில் பாசி படர்ந்த பாறைகளுக்கு இடையிலும், மணல் மேடு பகுதியிலும் தற்போது "முள்சங்கு" எனப்படும், மருத்துவ குணமுடைய விலை உயர்ந்த சங்கு வகைகள் மீனவர்களின் தூண்டில் மற்றும் சிறிய வலைகளில் சிக்கி வருகிறது.

    இவ்வகை சங்குகளின் சதைகள் மருத்துவ குணமுடையது என்பதால் ஒரு சங்கு ரூ.20ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், 'இந்த வகை சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.

    தற்போது கடல் வெப்பம், கடலின் சீற்றம், அலையின் திசை மாற்றம் உள்ளிட்ட இயற்கை காலநிலை மாற்றத்தால் கடற்கரை ஓரம் இழுத்து வரப்பட்டு, இப்பகுதியில் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் வாழ்கிறது.

    மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது' என்றனர்.

    • சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
    • 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.

    இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.

    இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.

    இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     

    பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது.
    • 1980-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த சங்கு ஒலிக்காததால் பராமரிப்பு இன்றி கிடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. தற்போது உள்ள இந்த இடத்தில் போர் சங்கு அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதாவது 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சை நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும் ‌.

    இந்த விளக்குகள் அமைப்பதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்திற்காக தஞ்சையில் போர் சங்கு நிறுவப்பட்டது. முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சாரம் உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சை நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது. ஆனால் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. இதனால் பராமரிப்பு இன்றி கிடந்தது.

    இந்த சங்கு மீண்டும் இயக்கப்பட்டு மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தொடங்கியது. அதன்படி இரும்பு தூண் மீது பொருத்தப்பட்டு இருந்த 100 கிலோ வரை எடை கொண்ட சங்கு சரி செய்யக்கூடிய பணி நடைபெற்றது. இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்தன.

    பணிகள் முடிந்ததை தொடர்ந்து சுதந்திர தின நாளாக இன்று முதல் சங்கு ஒலிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று முதல் பொற்கால சங்கு ஒலித்தது.

    இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். சரியாக இன்று மதியம் 12 மணிக்கு மேயர் தொடங்கி வைத்ததும் சங்கு ஒலித்தது. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் இந்த சங்கு ஒலித்தது.

    மேலும் தஞ்சை மாவட்டத்தில் கரந்தை, புதிய பேருந்து நிலையம் நீதிமன்ற சாலை , இ.பி. அலுவலகம் அருகே என 6 இடங்களில் சங்கு நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சங்கானது தினமும் காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி 5 முறை ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போரில் ஒலித்த சங்கு ஒலித்ததால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×