search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crime Squad Police"

    • கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.

    சேலம்:

    சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.

    பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .

    இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.

    தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

    • கடந்த 2011-ம் ஆண்டு மாயமான சிறுமி ஒருவரை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • சிறுமி மாயமான வழக்கை தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை காவல் துறையினர் கடந்த 2011-ம் ஆண்டு மாயமான சிறுமி ஒருவரை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சாலி கிராமம் மஜித் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மகள் கவிதா 2 வயது குழந்தையாக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டு காணாமல் போனார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால் எந்த வித துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியை கண்டுபிடிப்பதற்கு போலீசார் தற்போது ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    சிறுமி மாயமான வழக்கை தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். 2 வயதில் மாயமான சிறுமியின் புகைப்படத்தை வைத்து தற்போது 14 வயதில் வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்பதை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலமாக புகைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

    இந்த 2 புகைப்படத்தையும் ஒன்றாக வைத்து போஸ்டர் அடித்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    கவிதாவை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 9444415815, 9498179171 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் இப்படி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தனது மகளை தேட தொடங்கியுள்ள நிலையில், நிச்சயம் தனது மகள் திரும்ப வருவாள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் தந்தை கணேஷ். இதுபற்றி அவர் கூறும்போது, எங்கு சென்று குறி கேட்டாலும் மகள் திரும்ப கிடைத்து விடுவாள் என்றே சொல்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்து மகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

    ×