search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallacharaya incident"

    • சி.பி.சி.ஐ.டி போலீசார் 16 பேரை கைது செய்தனர்.
    • மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 63பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மெத்தனால் சப்ளை செய்த புதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால், கவுதம், தேவபாண்டலத்தை சேர்ந்த சடையன், ரவி, சேஷசமுத்திரம் செந்தில், மல்லிகைப்பாடி ஏழுமலை உள்பட 16 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டகோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜாதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால், கவுதம், தேவபாண்டலத்தை சேர்ந்த சடையன், ரவி, சேஷசமுத்திரம் செந்தில், மல்லிகைப்பாடி ஏழுமலை ஆகிய 12 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. அதன் பின்னர்சி.பி.சி.ஐ.டி போலீசார் 12 பேரையும் எத்தனை நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்குவார் என்பது தெரியவரும்.

    ×