search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Masilamani"

    • கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
    • டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.

    பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

     

    இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.

    தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா'  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார்.
    • அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது40). கணவர் ரமேஷ் தொழிலாளி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் கோவைப்புதூர் பகுதியில் 2 வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். குறைந்த வருமானம் ஈட்டிவரும் இவருக்கு பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

    இதற்காக வேலை முடிந்து, அந்த பகுதியில் பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சியில் நடந்த தமிழ்நாடு பளுதூக்கும் மாநில அளவிலான போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார். மேலும் அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். தாரணி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னையில் தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் நடத்தும் நடத்தும் தென்னிந்தியப் போட்டியில் தாயும், மகளும் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

    பளுதூக்கும் சாதனை குறித்து வீராங்கனை மாசிலாமணி கூறியதாவது:-

    "ஆரம்பத்தில், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர். இப்போது அவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். நான் முன்பு உடல் பருமனாக இருந்தேன். பயிற்சியாளர் சிவகுமார் எனக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்தார். இதி்ல் ஆர்வம் கொண்ட எனது மகள் தாரணியையும் என்னுடன் பயிற்சி பெற வைத்தேன்.

    போட்டியில் வென்ற போதும், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக இப்போதும் வீட்டு வேலைக்குத்தான் சென்று வருகிறேன். இதனால் சத்தான உணவு வகைகள் இல்லாமல், சாதாரண உணவையே சாப்பிட்டு வருகிறேன். ஏழ்மை நிலை இருந்தாலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், மகளும், நானும் தென் இந்திய போட்டியில் பதக்கம் வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயிற்சியாளர் சிவக்குமார் கூறும்போது, "ஒவ்வொரு பளுதூக்கும் வீராங்கனைக்கும் புரத உணவுக்கு குறைந்தபட்சம் மாதம் 2,500 ரூபாய் தேவைப்படும். நான் இலவசமாகபயிற்சி அளித்து வருகிறேன்.அடுத்ததாக சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சிறப்பாகச் பளுதூக்கி சாதனை படைப்பதன் மூலம் இவர்களுடைய வாழ்க்கை மேலும் ஒளிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

    வீட்டு வேலை செய்துகொண்டே பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாசிலாமணியும், வெண்கலம் வென்ற அவருடைய மகள் தாரணியும் கோவைக்கு பெருமையை தேடி வருவது பாராட்டுக்குரியது.

    ×