search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navakragangal"

    • கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பை பெறும்.
    • சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பு அக்குழந்தை பெற்று இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பையும், சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பும் அக்குழந்தை பெற்று இருக்கும்.

    கருவுற்ற தாய் மார்கள் சுகபிரசவம் பெற வர்மக்கலை மருத்துவத்தில் வர்மப்புள்ளிகள் உள்ளன.

    இந்த வர்மப்புள்ளிகளை சரியான காலத்தில் சரியான முறைப்படி தூண்டுவதன் மூலம் 100சதவீதம் சுகபிரசவம் பெற முடியும்.

    குழந்தை பாக்கியம் பெறும் தம்பதியர்களுக்கு மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ, தோல் நோய்கலோ இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு எதாவது ஒரு நோய் ஏற்படுத்தும்.

    ஆகவே குழந்தை பாக்கியம் பெற விரும்பும் தம்பதியர்கள் இவ்வாறு நோய்கள் இல்லாமல் இருந்தால் அது பிறக்கும் குழந்தையையும் பாதிக்காமல் இருக்கும்.

    • ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
    • ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன

    மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும்.

    இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.

    குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.

    நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

    கர்ப்பம்

    1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும்.

    2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது.

    3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன.

    4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன.

    5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது.

    6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.

    7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.

    8. எட்டாம் மாதம் லக்ன அதிபதி. தொப்புள் கொடி மூலம் குழந்தை உணவு எடுத்துக்கொள்கிறது.

    9. ஒன்பதாம் மாதம் சூரியன்: கர்ப்பத்திலுள்ள சிசு தாகம், பசி இவைகள் உணர வைக்கிறார்.

    10. பத்தாம் மாதம் சந்திரன்: பிரசவத்திற்கு தயாராக்குகிறார்

    இவ்வாறு நவகிரகங்கள் தன் வேலையை கர்பகாலத்தில் செய்கின்றன.

    • சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

    சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

    யமன், யமுனை, அசுவினிதேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வால்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் உண்டு.

    சூரியன் வழிபட்ட சிவாலயங்கள்:

    பரிதி நியமம்,

    வைதீஸ்வரன் கோவில்,

    தலை ஞாயிறு மயேந்திரப்பள்ளி,

    மாந்துறை,

    மங்கலக்குடி,

    குடவாசல்,

    நெல்லிக்கா,

    ஆடானை,

    கண்டியூர்,

    சோற்றுத்துறை,

    மீயச்சூர்,

    மேலைத் திருக்காட்டுப்பள்ளி,

    திருச்சுழியல்,

    வலிவலம்,

    தேவூர்,

    வாய்மூர்,

    திருப்புனவாயில்,

    நன்னிலம்,

    பூந்துருத்தி,

    காஞ்சீபுரம்,

    கேதாரம்

    உள்பட இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமானை வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் பேற்றினையும் பெற்றான்.

    சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவன்.

    ×