search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Kumar"

    • நிதிஷ் குமார் என்.டி.ஏ. தலைவராக நேற்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார். நாளையும் இருப்பார்.
    • தேஜஸ்வி யாதவ் அவருடைய தந்தை லாலு பிரசாரத் யாதவால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே.

    பீகார் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் போட்டியிடும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) தலைவர்களும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) புதுமுகத்தை முன்னிறுத்தும் என பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் (வயது 47) அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பாஜக தலைவரும், பீகார் மாநில துணை முதல்வருமான சம்ரத் சவுத்ரி, நிதிஷ் குமார்தான் அடுத்த முறையும் முதல்வராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சம்ரத் சவுத்ரி கூறியதாவது:-

    1996-ல் இருந்து பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழி நடத்தி வரும் நிதிஷ் குமாருடன் பாஜக உள்ளது. ஆகவே, நிதிஷ் குமார் நேற்றும் தலைவராக இருந்தார். இன்றும் தலைவராக இருக்கிறார். நாளையும் தலைவராக இருப்பார்.

    நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் (வயது 47) அரசியலுக்கு வருவது நிதிஷ் குமாரின் தனிப்பட்ட முடிவு. இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உள்கட்சி விவகாரம். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் பாஜக அவர்களுடன் நிற்கும்.

    தேஜஸ்வி யாதவ் அவருடைய தந்தை லாலு பிரசாரத் யாதவால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே. ஒருநாள் நாள் லாலு பிரசாத் யாதவ் தேஜ் பிரசாத் யாதவ் அல்லது மிசா பாரதி என்னுடைய அரசியல் வாரிசு என அறிவிக்கும்போது, தேஜஸ்வியை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு சம்ரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார்.
    • எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உடல் அளவில் களைத்துப்போய் விட்டார். மனதளவில் ஓய்வு பெற்று விட்டார். அவரது மந்திரிகளின் பெயர்களைக் கூட அவரால் சொந்தமாக சொல்ல முடியாது. நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயங்குகிறது. அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விடுக்கிறேன்.

    இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார். ஆனால், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து அணி மாறிவிடுவார். ஆனால், எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது. நிதிஷ்குமாரை தவிர, யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆவார்கள் என்பதை எழுதியே தருகிறேன். நான் சொல்வது நடக்காவிட்டால், பிரசாரம் செய்வதையே விட்டு விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார்.
    • உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள்

    பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார்.

    கூட்டணி முறிந்ததில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதற்கிடையே நிதிஷ் குமாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து அவர் எங்கள் கூட்டணியில் இணையும் நேரம் வந்துவிட்டது, அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை நிதிஷ் குமார் நிராகரித்தார்.

    இந்நிலையில் பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது நிதிஷ் குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 2005 வரை இருந்த லாலு பிரசாத் ஆட்சியோடு தற்போதைய ஆட்சியை ஒப்பிட்ட தேஜஸ்வி, இந்த அரசாங்கம் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், 2005க்கு முந்தைய காலத்தையே குறை கூறிக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதனை இடைமறித்து பேசிய நிதிஷ் குமார், முன்பு பீகாரில் என்ன இருந்தது? உன் (தேஜஸ்வி யாதவ்) தந்தை உருவாவதற்கு நான்தான் காரணம். உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள், ஆனாலும் நான் அவரை ஆதரித்தேன்.

    பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிக்கப்படுவதை லாலு யாதவ் எதிர்த்தபோது, அது தவறு என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் நான் அவரை எதிர்த்தேன் என்று தெரிவித்தார்.

    • பெண்களுக்கு மாதற்தோறும் 2500 ரூபாய், மானிய விலை சிலிண்டர் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.
    • 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் (JDU) ஆட்சி அமைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார்.

    பீகார் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ராஷ்டிரிய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி (தற்போது எதிர்க்கட்சி தலைவர்), கட்சித் தலைவர்களுடன் சட்டமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது "ஏழை பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்க வேண்டும். பெண்களுக்கு சமூக பாதுாப்பு வழங்க வேண்டும்" போன்றவை பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    அத்துடன் "நிதிஷ் குமார் அரசு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாங்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்" என்றார்.

    இதற்கிடையே அவரது மகனும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், "என்.டி.ஏ. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தேர்தல் அவர்களுக்கு அரசுக்கு கடைசியாக இருக்கும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மக்களுக்கு தேவையானதை செய்வோம்" எனக் கூறியிருந்தார்.

    • பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது.
    • 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?.

    15 வருட பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 வருடத்திற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது. பீகாரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் அதிக அளவில் மாசுவை வெளியிடும் 15 வருடத்திற்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆகையால், 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?. இந்த அரசு பீகார் மக்களுக்கு சுமையாகிவிட்டது. இது கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

    20 வருடத்திற்கு மேலாக நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மோசமான மாசு என்ற வறுமை, வேலைவாய்ப்புயின்மை, ஊழல், குற்றம், ஊடுருவல் ஆகியவற்றை பரப்பிவிட்டுள்ளது.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • பாஜக-வை சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த வருடம் இறுதியில் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு 2024-2025 மத்திய பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பாஜக-வை சேர்ந்த பலருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் வகையில் நிதிஷ் குமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். தற்போது பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று ஜிபேஷ் குமார், சஞ்சய் சரயோகி, சுனில் குமார், ராஜூ குமார் சிங், மோதி லால் பிரசாத், விஜய் குமார் மண்டல், கிருஷ்ண குமார் மந்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    பாஜக-வில் ஒருவருக்கு ஒரு பதவி என கொள்கை இருப்பதால் பீகார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார்.

    • தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அளித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
    • தற்போது நிதிஷ் குமார் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.

    மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக-வுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் நிதிஷ் குமார் கட்சி பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.

    மணிப்பூரில் நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ பதவிதான் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. ஆதரவை இழந்த போதிலும் பைரேன் சிங் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    மத்தியிலும், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.-வின் முக்கிய கூட்டணி கட்சியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விளங்கி வருகிறது. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். மத்தியில் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

    மேகாலயா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அதரவு அளித்திருந்த நிலையில், அதை திரும்பப் பெற்றது. இந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஐந்து எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது 60 இடங்களை கொண்ட பாஜக-வுக்கு 37 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.-க்கள், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கடசியின் மணிப்பூர் மாநில தலைவர்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் நிதிஷ் குமார்.

    • முதன்முறையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.
    • அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது.

    பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வாய்ப்புள்ளது. அவருக்காக தனது கதவை திறந்தே வைத்திருப்பேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாரத் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகும் கருத்தை நிதிஷ் குமார் நிராகரித்துள்ளார்.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியாதாவது:-

    மரியாதைக்குரிய வாஜ்பாய் என்னை மத்திய மந்திரியாக்கினார். அவர் என் மீது அதிக பாசம் காட்டினார். என்னுடைய பரிந்துரைரைக்கு அவரிடம் இருந்து சம்மதம் பெற ஒருபோதும் கடினமான சூழ்நிலையை சந்தித்தது இல்லை.

    முதன்றையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.

    அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது. இரண்டு முறை என் கட்சியில் உள்ளவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்கள் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தினர். இரண்டு முறையும் நான் அதை சரி செய்தேன்.

    இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    • நிதிஷ்குமார் கையில் ரூ.21,052 மற்றும் பல்வேறு வங்கிகளில் ரூ.60,811.56-ம் உள்ளது.
    • சொந்தமாக டெல்லி துவாரகாவில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சொசைட்டியில் ஒரு வீடு உள்ளது

    பாட்னா:

    பீகாரில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாளில் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட்டு, அதை அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.அதன்படி முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மந்திரிகளின் சொத்து மதிப்பு நேற்று முன்தினம் அரசு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

    இதில் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி என தெரியவந்துள்ளது. அவரது கையில் ரூ.21,052 மற்றும் பல்வேறு வங்கிகளில் ரூ.60,811.56-ம் உள்ளது.

    நிதிஷ் குமாரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.16,97,741.56 ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ.1.48 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அவருக்கு சொந்தமாக டெல்லி துவாரகாவில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சொசைட்டியில் ஒரு வீடு உள்ளது. அரசு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின்படி மாநிலத்தின் பல மந்திரிகள் நிதிஷ் குமாரை விட அதிக சொத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது.
    • மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    இன்றோடு 2024 ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது. நாளை நாம் 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்.

    இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. பல புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. அவ்வகையில் இந்தாண்டு வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ரீவைண்ட் செய்தியில் நாம் பார்க்கவுள்ளோம்.

    1. டி20 உலகக்கோப்பையை வென்றபின் ரோகித்தும் கோலியும் கட்டிப்பிடித்த புகைப்படம்

    2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். 2007-க்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணியின் உணர்ச்சிமிகு தருணமாக இருந்தது.

    அப்போது ரோகித்தும் கோலியும் கண்களில் அக்கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    2. மக்களவை தேர்தலுக்கு பின்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்த புகைப்படம்

    2024 மக்களவை தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார். பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிக இடங்களை வென்ற நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியின் கிங் மேக்கர்களாக உருவெடுத்தனர்.

    அந்த சமயத்தில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    3. ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்பு துக்கத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம்

    ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார்.

    அப்போது வினேஷ் போகத் 50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தியறிந்து சோகத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    4. திருமணத்தின்போது லூடோ விளையாடிய மாப்பிள்ளையின் புகைப்படம்

    திருமணத்தன்று மணமகனும் மணமகளும் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால் திருமணம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஒரு மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் மனமேடையிலேயே செல்போனில் லூடோ விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

    5. தாங்கள் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் படத்தை பார்த்து ரசித்த ஷாருக்கான் சல்மான் கானின் வீடியோ

    ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை சல்மான் கானும் ஷாருக் கானும் இணைந்து டிவியில் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    6. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வாகன பேரணியை மரத்தின் மேலே அமர்ந்து ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்த நிகழ்வு

    2007-க்கு பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணியினர் மும்பையில் வாகன பேரணி சென்றனர். அப்போது மரத்தின் மேலே ஏறி அமர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய அணி வீரர்களை புகைப்படம் எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    • முதல்-மந்திரி வேட்பாளா் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அண்மையில் அமித் ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • நிதிஷ்குமார் ஏற்கனவே ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடனான மகா பந்தன் கூட்டணியில் இருந்தார்.

    பாட்னா:

    பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி எதிா்க்கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு பீகார் சட்டசபை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்-மந்திரி வேட்பாளா் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அண்மையில் அமித் ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதல்-மந்திரி நிதிஷ் குமாரை ஓரங்கட்ட பா.ஜ.க. தலைமை முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் பரவின. 'பீகாா் என்று வரும்போது, நிதிஷ் குமாரின் பெயரை மட்டுமே முதல்வராக குறிப்பிட வேண்டும்' என்ற பதிவுகள் ஐக்கிய ஜனதா தளத்தின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டன.


    இதைத் தொடா்ந்து, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நிருபர்களை சந்தித்த மாநில துணை முதல்வரும் பா.ஜ.க. பொதுச் செயலருமான சாம்ராட் சவுத்ரி, 'பீகாரில் நிதிஷ் குமாா் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி தோ்தலை எதிர் கொள்ளும். இதில் எந்த குழப்பமும் இல்லை' என்றாா்.

    ஆனால், பா.ஜ.க.வை சோ்ந்த பீகாரின் மற்றொரு துணை முதல்வரான விஜய் குமாா் சின்கா, பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் மட்டுமே வாஜ்பாயின் கனவை நனவாக்க முடியும் என்று வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் தெரிவித்தாா்.

    இதையடுத்து, நிதிஷ் குமாா் தலைமையில்தான் பீகாா் தோ்தலில் போட்டி என்பதை மாநில பா.ஜ.க. தொடா்ந்து உறுதி செய்து வருகிறது. நிதிஷ் குமாரின் எதிா்ப்பாளராக முன்பு அறியப்பட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளாா்.


    இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதாதளம் தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமான வராக அறியப்படும் எம்.எல்.ஏ. பாய் வீரேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், 'பீகாரில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வரும் காலங்களிலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அமைந்தது ஆகும். வகுப்புவாத சக்தியான பா.ஜ.க.வுடன் தனது கூட்டணியை முறித்துக் கொள்ள நிதிஷ் குமாா் முடிவு செய்தால், அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தாா்.

    நிதிஷ்குமார் ஏற்கனவே ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடனான மகா பந்தன் கூட்டணியில் இருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதில் இருந்து வெளியேறி பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தார். இந்த நிலையில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைக்க லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.

    • நிதிஷ் குமார் பீகார் மாநில முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார்.
    • நவீன் பட்நாயக் ஒடிசாவிற்காக பல வருடங்காளக பணியாற்றியுள்ளார்.

    ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளனர்.

    நிதிஷ் குமார் பீகார் மாநில முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார். நவீன் பட்நாயக் ஒடிசாவிற்காக பல வருடங்காளக பணியாற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

    "பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். நிதிஷ் குமார் பல வருடங்களாக முதல்வராக இருந்து வருகிறார். இன்றைய முப்பது வயதை எட்டியவர்கள் லாலுவின் காட்டு ராஜ்ஜியத்தைப் பார்த்ததில்லை" என்றார்.

    முன்னதாக, மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் "2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் என்டிஏ போட்டியிடும்" என்றார்.

    மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் எல்.ஜே.பி., ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதசார்பற்ற) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 48 எம்.எல்.ஏ.க்களுடன், பாஜக (8) ஆதரவுடன் ஆட்சி அமைத்து்ளளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2025 இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ×