search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spare parts"

    • வட கொரிய தலைங்கர் பியங்காங்கில் கிம் ஜாங் உன் - ஐ சந்தித்து அவருக்கு ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus limousine] என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின்.
    • கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார்.

    ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே வருகிறது. மேற்கு நாடுகளுக்கு பரம எதிரிகளாக விளங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்களது நாடுகளுக்கிடையில் பரஸ்பர உறவை நிலைநாட்ட முயற்சித்து வருகின்றனர்.

    உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதராவாக ஆயுதங்களை அனுப்பும் அளவுக்கு இந்த புதிய உறவு வலுப்பெற்றுள்ளது. 24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

    வட கொரிய தலைங்கர் பியங்காங்கில் கிம் ஜாங் உன் - ஐ சந்தித்து அவருக்கு ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus limousine] என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின். மேலும் இருவரும் அந்த காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர். கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார். பின்னர் கிம் ஜாங் உன் காரை ஆர்வமாக ஓட்டிப்பார்த்தார். இந்த  வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்நிலையில் புதின் பரிசளித்த அவுரஸ் லிமவுசைன் கார் குறித்த சர்ச்சைக்குரிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அவுரஸ் லிமவுசைன் கார்களை அவுரஸ் மோட்டார்ஸ் என்ற ரஷிய நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கார் தயாரிப்பிற்கான உதிரிபாகங்களை அந்நிறுவனம் தென் கொரியா, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலி என பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக ரியூட்டர்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

     

    வட கொரியாவும் தென் கொரியாவும் பரம் எதிரிகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க வட கொரிய அதிபருக்கு தென் கொரிய உதிரி பாகங்களைக் கொண்ட காரை புதின் பரிசளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

    • தனியார் செல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி திருட்டு போனது.
    • அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே மேகநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுவப்பட்டு இருந்த தனியார் செல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி திருட்டு போனது. அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து செல்போன் டவர் அமைத்த சென்னையை சேர்ந்த ஜிடிஎல் என்ற தனியார் நிறுவன அதிகாரி தமிழரசன் (வயது 28) என்பவர் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், வழக்குப் பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
    • பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

    பல்லடம்:

    பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×