search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNEB"

    • சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.
    • சென்னையின் முக்கிய சேவையான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையிலும், 400/23 கிலோவாட் மின்சார பாதையிலும் திடீர் பழுது ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உயர் அழுத்த மின் வழித்தடத்தில் ஏற்பட்ட லேசான உராய்வும், அதனைத்தொடர்ந்து வெடித்த தீப்பொறிகளுமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

    இந்த பழுதின் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.

    சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, சென்டிரல், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, நந்தனம், பெருங்குடி, தியாகராயநகர், சூளைமேடு, வில்லிவாக்கம், அயப்பாக்கம், திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட நகரின் பல இடங்கள் இருளில் மூழ்கின.

    ராயபுரம், துறைமுகம், ஆர்.கே.நகர், தண்டையார்ப்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், பெரம்பூர், கொடுங்கையூர், ஓட்டேரி என வடசென்னை பகுதிகள் முழுவதுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு தூக்கத்தை தொலைத்து மக்கள் திண்டாடி போனார்கள். மக்கள் அனைவருமே மின் நிலையங்களையும், மின்னக கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்புகொண்டு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். முக்கிய சாலைகளும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர்.

    சென்னையின் முக்கிய சேவையான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை - மயிலாப்பூர் இடையிலான பறக்கும் ரெயில் நிலையங்கள் அனைத்துமே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கின. இருள் சூழ்ந்திருந்ததின் காரணமாக ரெயில்களும் மெதுவான வேகத்திலேயே இயக்கப்பட்டன. பயணிகள் செல்போன் வெளிச்சத்திலேயே ரெயில்களில் பயணித்தனர்.

    பின்னர் சில மணி நேரத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டது. மின்வெட்டால் நேற்று இரவு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

    அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால் மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

    சென்னையில் ஏற்பட்ட மின்தடை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் சரி செய்யப்ட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து மருத்துவமனை அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ந் தேதிக்கு வீட்டு -அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.

    இதையடுத்து மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறித்து குறுந்தகவல் சேவையை (எஸ்.எம்.எஸ்) மின் நுகா்வோரின் கைப்பேசிக்கு தற்போது மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.

    மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத்தெரிய வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு கூறி, அதை நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

    • அம்பத்தூர் எஸ் மற்றும் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை
    • நசரத்பேட்டை, மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அம்பத்தூர்: எஸ் மற்றும் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், எஸ் மற்றும் பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி பேஸ் 1 மற்றும் 2, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பி.கே.எம். தெரு, இருளர் காலனி, எட்டீஸ்வரன் கோவில் தெரு, செட்டி மெயின் தெரு.

    செம்பரம்பாக்கம்:

    நசரத்பேட்டை, மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல்.

    செங்குன்றம்:

    பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர்.

    • 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    சென்னை:

    சென்னையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    சொந்த ஊரில் பணி, கேங்மேன்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் கேங்மேன்கள் நடத்தும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    * போராட்டம் தான் ஒருவனின் இருத்தலை உறுதி செய்யும்.

    * ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    * எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    * போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம்.

    * கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக்கூட இல்லை.

    * குறையை தவிர எதையும் செய்ய முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    * முதலில் கரண்டை கொடுங்கள், அதன் பின்னர் இலவச மின்சாரத்தை அளிக்கலாம் என்று கூறினார்.

    • தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

    தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.

    மாவட்டம் வாரியமாக ஆராய்ந்து நீண்ட காலமாக பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த தாமல், முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாமல், முசரவாக்கம், துணை மின் நிலையங்களை சுற்றி உள்ள தாமல், பாலுசெட்டிசத்திரம், வதியூர், ஒழக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை ஏற்படும் என காஞ்சிபுரம் தெற்கு செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறைமலைநகர் என்.எச்.1, பேரமனூர் சாமியார் கேட், பாவேந்தர் சாலை, என்.எச்.2, விரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    • நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக நாளை அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், கே.கே நகர், கிண்டி, ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

    நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

    அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், வானகரம் ரோடு, ஒரகடம், சி.டி.எச்.ரோடு, செங்குன்றம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    பல்லாவரம்: கலைவாணர் நகர், கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, திருவேங்கட தம்முடையான், யூனியன் கார்பைடு காலனி, நடேசன் சாலை, சர்ச் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி.

    சோழிங்கநல்லூர்: பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், ஜல்லடி யான்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயர் நகர், மேட வாக்கம், சித்தாலப்பாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    அடையார்: வி.ஓ.சி. நகர் 1-வது முதல் 3-வது தெரு வரை, இந்திரா நகர், பனையூர், குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, காயிதேமில்லத் தெரு, செம்மொழி தெரு, பனையூர் குப்பம் ஏரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    ஐ.டி.சி: ஈஸ்வரன் கோவில், காரப்பாக்கம், கே.சி.ஜி.கல்லூரி ரோடு, காலியம்மன் கோவில் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, குப்புசாமி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.

    • புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வரும் 21-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

    சட்டம் ஒழுங்கு சீரழிவு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

    • மத்திய மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி RDSS திட்டத்தின் கீழ், நிதியை பெறுவதற்காக மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.
    • தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

    மத்திய மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும் என மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக தன்கேட்க்கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டமொத்த நிதி இழப்பானது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்து 31.03.2021 வரை ரூ.1.13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22ம் ஆண்டில் இருந்து 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால் தமிழ்நாட மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்த கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

    இதன் விளைவாக 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-2022) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக கடந்த 2011 -12ம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259 சதவீதம் அதிகரித்து 2020-21ம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக உயர்ந்தது. இவ்வாறு அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடுசெய்ய அப்போதைய மின்வாரிய கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயரவினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சுமையினை கருத்தில் கொண்டு இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டுதோறும் சிறிய அளவில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது. மத்திய மின் அமைச்சகத்தின் வழிக்காட்டுதல்களின்படி விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின்கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.

    இந்த வகையில் 2022-23 நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வானது 01.04.2022க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது. மேலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின்கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில் அனைத்து மின்னிணைப்பகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வம் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீத வரை மின்கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 2024 ஜுலை மாதத்தை பொறுத்த வரையில் 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

    இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் ஆணையம் கட்டணத்தை முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை எண் 6/2024 வெளியிட்டுள்ளது.

    இந்த மின் கட்டண உயர்வின் முக்கிய அம்சங்கள்

    தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

    1. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்த்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    2. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிஎண்.222-ன்படி நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன் அடைவர்.

    3. தற்பொழுது குடிசை. விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள், மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    4. இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5/- வரை மட்டுமே உயரும்.

    5. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15/- வரை மட்டுமே உயரும்.

    6. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25/- மட்டுமே உயரும்.

    7. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.

    8. 2.19 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.

    9. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா. 150 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 25 காசுகள் மட்டுமே உயரும்.

    10. தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட் ஒன்றிற்கு 35 பைசா மட்டுமே உயரும்.

    11. 22.36 இலட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15/- மட்டுமே உயரும்.

    12. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு 35 பைசா மட்டுமே உயரும்.

    16. உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.

    14 நிலையான கட்டணங்கள் (Fixed Charges) கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும்.

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன.
    • உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு.

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

    ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.

    ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" தெரிவித்துள்ளார். 

    • மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
    • வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்வு.

    தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர், " 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.

    இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும்" என்றார்.

    இதேபோல், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது கண்டனத்திற்குரியது என பாமக வழங்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

    இதுகுறத்து மேலும் அவுர், " விக்கிரவாண்டி தேர்தலுக்கு பிறகு மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் என முன்பே நாங்கள் கூறி வந்தோம்.

    இந்த மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என்றார்.

    தொடர்ந்து, மின்கட்டண உயர்வு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், "மின் கட்டண உயர்வால் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர முடிகிறது" என்றார்.

    ×