search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuesday"

    • இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
    • நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

    திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களை நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களாக பலரும் கருதுகின்றனர். ஆனால் செவ்வாய்க் கிழமையை எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற தினமாக எவரும் பார்ப்பதில்லை. உண்மையில் செவ்வாய் கிழமைக்கு எந்த ஒரு மகிமையும் இல்லையா? இதுகுறித்து நமது ஆன்மிகம் கூறுவது என்ன? செவ்வாய்க்கிழமையில் நாம் எதை எல்லாம் செய்து என்னென்ன பலன்களை அடையலாம்? இப்படி பல தகவலைகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

    நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும். செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்றும் சொல்வார்கள்.


    முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரத்தில் இதை பற்றி மிகவும் சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள் போன்றோர் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவாகவே தீர்ந்துவிடும். அதேபோல் மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

    கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர உங்களது கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும். ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

    முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் நோய் நொடியில்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று இனிமையான வாழ்வினை அடைய முருகப் பெருமான் திருவருள் புரிவார். அதிலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இதனை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.

    • எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள்.
    • வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள்.

    குழந்தை பிறப்பது என்பதே ஒரு அற்புதமான நிகழ்வு, ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் என்ன குழந்தை பிறக்கும் என்பதில் அதீத ஆர்வத்தில் இருப்பார்கள். அப்படி குழந்தை பிறந்தவுடன் பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஜாதகம் எழுதுவதற்கும் ராசி நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள குழந்தை பிறந்த பின்பு அதை எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது மூலம் அவர்களின் தலையெழுத்து எப்படி இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.

    அப்படி இருக்க செவ்வாய் கிழமை கிழமைகளில் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயம் அதிகமாக இருக்கும். அப்படி செவ்வாய் கிழமை ஆண் குழந்தை பிறந்தால் பிள்ளைகளின் வாழ்நாள் பற்றிய பலன்களை பார்ப்போம்.

    செவ்வாய் கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

    எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள். இவர்களிடம், கற்பனை திறன் அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் சிறந்த தலைவர்கள் அல்லது விளையாட்டு துறையில் பணிபுரிபவராக இருப்பார்கள்.

    அவர்கள் எழுத்து, இசை, கலை அல்லது சுய வெளிப்பாட்டின் பிற வடிவங்களில் திறமை பெற்றிருக்கலாம்.

    இந்த கிழமையில் பிறந்தவர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய காதல் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள். எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் அவர்களுடைய அன்பின் மூலம் ஜெயித்து விடுவார்கள்.

    செவ்வாய் கிழமை பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் இரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். மேலும் வாழ்க்கையில் காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் வண்டியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

    இவர்களிடம் பொறுமை என்பது இருக்காது. இதனால் அவர்கள் செய்ய கூடிய செயல்களை அவசரமாக செய்து விட்டு அதன் பிறகு அதனை பற்றி சிந்திப்பார்கள். இவர்களிடம் கோபம் குணமானது அதிகமாக காணப்படும். இதனால் நிறைய உறவுகளை இழக்க நேரிடும். வெளிப்படையாக மனதில் உள்ள விஷயத்தை மற்றவர்களிடம் பேசுபவர்களாக இருப்பார்கள். இதனால் நிறைய நபர்களிடம் மோதல்கள் ஏற்படும்.

    • மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், காங்கேயம்சந்தை ஏற்படுத்துதல் மற்றும் திருப்பூரில் பிரதிவாரம் திங்கட்கிழமை இயங்கி வரும் மாட்டுச் சந்தையின் கிழமையினை மாற்ற விவசாயிகளின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு காங்கேயம் நகராட்சியில் பிரதிவாரம் திங்கட்கிழமை அன்றும் மற்றும் திருப்பூர்மாநகராட்சி கோவில்வழி அமராவதி நகரில் பிரதிவாரம்செவ்வாய்க்கிழமை அன்றும் மாட்டுச்சந்தைகள் நடைபெறும்.

    அதன்படி வருகிற 19.6.2023 (திங்கட்கிழமை) அன்று காங்கேயம் நகராட்சியிலும், 20.6.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று திருப்பூர்மாநகராட்சி கோவில்வழி அமராவதி நகரிலும் மாட்டுச் சந்தைகள் நடைபெறும். இதற்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிற்கி ணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருப்பூர்மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    ×