என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vasool"
- வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
- படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது
இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கருடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.
விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தவர். விடுதலை படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுப்பட்ட சூரியாக திரையில் வந்தார். அதற்கடுத்து கருடன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை [ஜூலை 3] வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நேற்று வரை இத்திரைப்படம் ரூ.415 கோடி ரூபாய் வசூலித்திருநத்து
- பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இவசூல் ரிப்போர்ட் வந்துள்ளது.
அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை ரூ.415 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் ரூ.555 ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் நான்கு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் விரைவில் 600 கோடியை தாண்டி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
- மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர்.
முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
- 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.
தற்பொழுது படத்தின் முதல் பாடலான டா டக்கரா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இது பிரபாஸ் மற்றும் திஷா பதானி இடையே உள்ள காதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கல்கியை பார்த்தேன். என்ன ஒரு படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேர லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். நாக் அஸ்வின், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன்', இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
- சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.
- கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.இருவருக்கு இடையில் வெடிக்கும் ஈகோ கிளாசை திரில்லிங் டிராமாவாக 'பார்க்கிங்' திரைப்படம் உருவாகியிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான அளவில் வசூலைக் குவித்தது.
கர்ப்பிணி மனைவிக்காக கார் ஒன்றை வாங்கும் ஈஸ்வர் (ஹரிஸ் கல்யாண்). வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்வதால் இளம்பரிதிக்கு (எம்.எஸ்.பாஸ்கருக்கு) பைக்கை நிறுத்துவதில் சிரமமாகிறது. இதனால் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஈகோ மோதலாக வெடிக்கிறது.
வம்புக்கு இளம்பரிதியும் ஒரு காரை வாங்க மோதல் இன்னும் தீவிரமடைகிறது. இதனால் அவர்களின் குடும்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதே பார்க்கிங் படத்தின் 2 மணி நேர கதை. காமெடி ரோல்களில் மட்டுமின்றி சமீப காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் ஈகோ கொண்ட சராசரி நபர் கதாப்பாத்திரதத்தில் மிரட்டியிருப்பார்.
கோடி கோடியாக செலவு செய்து வில்லன்களை டெரராக காட்ட முன்னணி இயக்குநர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேலையில், கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமம் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச மொழி ஒன்றிலும் பார்க்கிங் படம் ரீமேக்காக உள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்