என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdominal pain"

    • தியாகதுருகம் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த மயிலவன் மனைவி விஜயலட்சுமி (வயது 22) இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வயிற்று வலியின் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது பருத்தி வயலுக்கு சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். தொடர்ந்து தனது தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்த இவரது அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது அங்கே மயங்கி நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு விஜயலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

    • சோனியா காந்திக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது வழக்கம்.
    • மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அம்மாவாசை பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கூத்தன். இவரது மனைவி சோனியாகாந்தி (வயது 26) இருவருக்கும் இடையில் 7 வருடம் முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோனியா காந்திக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது வழக்கம். வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்த சோனியாகாந்தி மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அக்கம்பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சோனியா காந்தியின் தந்தை கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்ட ர்கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவாமூர் அப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வனிதா (வயது33). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வனிதா தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்இவரை மீட்டு பண்ருட்டிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்குசிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்ட ர்கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வயிற்று வலியின் காரணமாக கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    கடலூர்:

    மேல் புவனகிரியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி வினோதினி (வயது 27). இவர்களுக்கு ரோகேஷ் (8), கோகுல் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை கடுமையான வயிற்று வலியின் காரணமாக தன்னுடைய வீட்டில் உள்ள கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார். வயிற்று வலி அதிகமானதால், வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூலி வேலைக்கு சென்ற முருகவேல் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயற்சித்தார். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த முருகவேல், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோதினியை மீட்டு புவனகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், வினோதினி இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.
    • அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கோபுராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்.

    இவரது மனைவி சித்ரா (வயது 36). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார்.

    இதுகுறித்து சித்ராவின் தாயார் பூங்கோதை ( 66) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எழிலரசிக்கு(29) வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை வானூர் அரசு மருத்துவமனைக்கு அவரின் கணவர் செல்வகுமார் அழைத்து சென்றார்.
    • எழிலரசிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    விழுப்புரம்:

    வானூர் அடுத்த தொள்ளாமூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 33) டிரைவர். இவர மனைவி எழிலரசி (29). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு எழில ரசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து எழிலரசியை வானூர் அரசு மருத்துவமனைக்கு செல்வ குமார் அழைத்து சென்றார். அங்கிருந்து திண்டி னம் அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்கான அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் எழிலரசி கருவுற்று இருப்ப தாகவும், அதே சமயத்தில் குழந்தை கருப்பைக்கு செல்லும் குழாயில் வளர்வதால் வலி உள்ளதை கண்டறிந்தனர். இதனை அடுத்து எழிலரசியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எழிலரசிக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் முடிவெடுத்து செல்வ குமாரிடம் கூறினார்கள். இதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதுஎழிலரசிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீலவேணி நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்ன சேமக்கோட்டையை சேர்ந்தவர் வேலு செங்கல்சூலை வியாபாரி. இவரது மகள் நீலவேணி (வயது 24) எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 7ந் தேதி காலை 6 மணி அளவில் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டாக்டர் நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு தனது கணவரை அழைத்து கொண்டு சிகிச்சை பெற சென்றார்.

    அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர், நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த பெண் சிறுநீர் சேகரிப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த கழிவறைக்கு சென்றார்.

    அப்போது கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவமாகி உள்ளது. கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது. வயிற்று வலிக்காக சிகிச்சை பெற அழைத்து வந்த தனது மனைவி, குழந்தை பெற்ற சம்பவம் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த கணவரை அதிர்ச்சியடைய செய்தது.

    கழிவறையில் பிரசவித்தது குறித்து அந்த பெண்ணிடம் டாக்டர்கள் கேட்டனர். அப்போது, தான் கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.

    இதையடுத்து அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறந்த குழந்தைக்கு தொற்று ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டி இருப்பதால் கூடுதல் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    ஆனால் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சாவக் காட்டில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    • விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யாவுக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார்.
    • வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம், செஞ்சி அருகே உள்ள வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவரது மனைவி சத்யா (35). இவருக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
    • யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.

    யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

    * உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.

    * யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.

    * இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.

    * யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

    * மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.

    * யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

    * யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.

    • கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
    • வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி :

    தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44). விவசாயி, இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத் தன்று தனது விவசாய நிலத்துக்குச் சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார். இதுகுறித்து அவரது தம்பி கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×