என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accusation"

    • மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது.
    • தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் அதிமுக கவுன்சிலர்கள் தட்டிக் கேட்போம்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள், கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணத்தை தனியாருக்கு அனுமதி அளித்த மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகரா ட்சியின் முந்தைய கூட்டத்தில் குப்பை அள்ளுவதற்கு தனியாருக்கு டெண்டர் விட அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் அந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த மாதமும் அந்த விவாதம் மீண்டும் சபைக்கு வருகிறது. மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு கட்டிய வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

    மேயருக்கு அதிகார வரம்பு என்னவென்று தெரியவில்லை. இந்த டெண்டருக்கு முன் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

    அவசர கோலத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் எத்தனை லட்சம்-கோடிகள் கைமாறியது என தெரியவில்லை.

    தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் நாங்கள் தட்டிக் கேட்போம். இதில் ஊழல் நடந்து உள்ளது. கண்டிப்பாக விசாரணை தேவை.

    கோவை மாநகராட்சி மேயர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் விரைவில் சோதனைக்கு வரும். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.கோவை மாநகராட்சியில் அத்தனை ரோடும் பழுதடைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • காரைக்குடியில் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

    காரைக்குடி

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடத்தி வரும் ஊழல் எதிர்ப்பு பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலூருக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டி.டி.நகரில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழ் மொழியை, அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியி னருக்கு சொந்தமாக காசி யில் இருந்த இடத்தை அப்போைதய ஆளும் அரசு அபகரித்தது.

    அதனை தற்போதைய பா.ஜ.க. அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு விற்பனையை அதிகரிக்க பாக்கெட்டு களிலும் மது விற்க முடிவு செய்துள்ளனர்.

    தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனை அடைக்க இனிமேல் கடனே வாங்காமல் இருப்ப தோடு வாங்கிய கடனை வட்டியும், அசலுமாகமாக செலுத்தவே 27 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை விட, இரு மடங்கு மதுபான தொழிற் சாலை களை நடத்தி வரும் தி.மு.க.வினரும், தரகர்களும் பெறுகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பி னர் தேர்ந்தெடு க்கப்பட்டு இத்தொகுதியின் மேம்பாட்டுக்காக குரல் கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சித பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன், மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை.

    மாவட்ட துணை தலைவர் நாராய ணன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் காசிராஜா, இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜா சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பி னர் சிதம்பரம்.

    மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர், தற்போது கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலும் வெறி நாய் வலம் வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர்.

    மக்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீழக்கரை நகர் மக்களை நாய் கடி தொல்லையில் இருந்து பாதுகாக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழக்கரை பொதுமக்கள்

    100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரசியல் செய்வதற்காக கர்நாடக பா.ஜ.க. காவிரி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி யின் 155-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தெற்குத்தெரு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். காவிரி பிரச்சினைக்கு முதல் கார ணம் பா.ஜ.க. குழந் தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகின்றனர். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல் 15 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கொடுத்து வந்தார். ஆனால் போராட்டத்தை தூண்டியது பா.ஜனதா தான்.

    கர்நாடக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் தருவது அம்மாநில மக்களி டையே பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. இதை திசை திருப்புவதற்காக பா.ஜனதா அரசியல் செய்கிறது. இங்குள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?. தற்போது டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காவிரி பிரச்சினையில் கர்நாடக முன்னாள் முத லமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் தலை யிடக்கூடாது என்று கட்சி மேலிடத்தில் கூறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மா பட்டி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் காங்கிரஸ் தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தேசிங், நகர்மன்ற கவுன்சிலர் அமுதா சரவணன், பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் உலகநாதன், ராஜ்குமார், பழனிக்குமார், வட்டார தலைவர்கள் முரு கேசன், தளபதி சேகர், கள்ளிக்குடி பாண்டியன், வீரபத்திரன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னை:

    கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு சமுதாய கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. குடிப்பதற்கு குடிநீர் இல்லை என ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

    இதுபற்றி மாநில துணை செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    அதிகாலையில் கைது செய்து இங்கு அழைத்து வந்தனர். பெண்கள் கைக் குழந்தைகள் உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இங்கில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை.

    பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்களை தரம் தாழ்த்தி வழிநடத்துகின்றனர். நாங்கள் உணவு கேட்கவில்லை. 300 பேர் உள்ள இடத்தில் 30 பேருக்கு மட்டும் உணவு கொடுத்தால் எப்படி? அதனால் தான் நாங்கள் யாரும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

    குழந்தைகளுக்கு மட்டும் பிஸ்கெட் வாங்கி கொடுத்தோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த சமுதாய கூடத்திலும் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து ஷேர் ஆட்டோக்களை தவிர்த்த மாணவர்கள், கடந்த சில தினங்களாக அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இன்று காலை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்காக மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக மாணவர்கள் காத்திருந்தும் அரசு பஸ் வரவில்லை. நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பகுதி பரபரப்பானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் வரவில்லை என மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது ஒரு மணி நேரம் தாமதமாக அரசு பஸ் வந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். வருங்காலங்களில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த வரவேற்பை திட்டமிட்டு மறைக்க முயன்றவர்களுக்கு தோல்வியடைந்து விட்டார்கள்.
    • ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    மதுரை

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் கூறி யதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டி ருக்கிற தெய்வீக திரு மகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலா ளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமி கள் சிலர், தெய்வீக திருமக னார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்தனர்.

    அந்த சுயநலவாதி களிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டு கின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தி னார். எடப்பாடி பழனிசாமி.

    மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள்.

    தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

    எல்லோரும் வரவேற்ற புண்ணிய பூமி இன்றைக்கு சமீபகாலமாக சில கயவர்கள், அரசியலில் முகவரி அற்றவர்கள், அரசியலில் காணாமல் போனவர்கள் தேவரின் கவசத்தை முக மூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு தேடுவது குற்றமல்ல, ஆனால் பிறரை இழிவுபடுத்த வேண்டும், சிலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

    பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகை ஒரு வரலாற்று வருகையாக தென் மாவட்ட மக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.
    • கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது.

    வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது. சிறுபான்மையினருக்கு தி.மு.க.-காங்கிரஸ் என்ன செய்தது?

    கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.

    தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் பேர் சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்களில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் ஊழலற்ற மோடிக்கும் ஊழல் ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிரான தேர்தல்.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

    • ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதில் எல்லாம் எடப்பாடி கையொப்பமிட்டுவிட்டார்.

    டாக்டர் ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    வன்னியர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்கிறது. மோடியின் அதையே சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு எல்லா வேலைவாய்ப்பும் போயிடுச்சு. மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வச்சிருக்கார். இந்தக் கடனை அம்பானிக்கும் அதானிக்கும் வாங்கியுள்ளார். அவர்களுக்கு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட மோடி நிறை வேற்றவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் 2 ஆண்டுகளிள் நிறைவேற்றி உள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    • அதிகாரி பழனி மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தற்போது எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் பழனி. இவர் தற்போது எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ளார்.

    இவர் ரூ.1.79 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிபபு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து முகப்பேர் பகுதியில் உள்ள வி.ஜி.என். நகரில் உள்ள பழனியப்பன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா ஆகியோர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சுகாதார அதிகாரி பழனி மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது.
    • கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்தவித தகுதியும் இல்லை.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதி, மதம், மொழி அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், மோடி அரசு கல வர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதனை தடுக்கா மல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது. அரசியலுக்காக அயோத்தியில் ராமர் கோவிலை மோடி கட்டினார். எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம். நானும் ராமர் பக்தர் தான். நாங்கள் எப்படி ராமர் கோயிலை இடிக்க விடுவோம். இடிப்பது காங்கிரஸ் வழக்கம் அல்ல, கட்டுவது தான் காங்கிரஸ் வழக்கம்.

    மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் சத்திய ராஜ் நடித்தால் உண்மையாக நடிக்க வேண்டும்.

    கல்வி என்றால் பெருந்தலைவர் காமராஜர் தான் முன்னுதாரணம். கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க. விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடக்கிறது. அவசர கதியில் எதையும் செய்யவேண்டாம், நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு வலியுறுத்தி உள்ளோம். சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கை மாற்றுவதற்கு தேவை இருக்காது என்று நெல்லை மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்தார்.

    ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று தான் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி தரம் குறையாக பேசி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.
    • எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.

    எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.

     

    இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    ×