என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advice"

    • வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ''டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, ''அதிக சம்பளம்'' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வருகிறது.

    இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்ப்டடால் 96000 23645, 87602 48625, 044-28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கை.
    • குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீல் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டக்னர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கைகள், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது குறித்த ஆலோசனை மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.அவற்றை விரைந்து தீர்வு காணக்கோரியும், நிலுவையில் உள்ள பிடியாணையை நிறைவேற்றவும் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட் வழங்கல்.
    • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழபாலம் பகுதியில் நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ பங்கேற்று வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.

    மேலும் சாலை விதிகள், தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மகிழ்வாகனன், நகர காவல் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி சிறப்பித்து பேசினார். டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி. தினகரன் பிறந்தநாளான வருகிற 13-ந் தேதி காலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்தார்கள். பிறந்தநாளன்று காலை பெரிபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில் காலையில் பூஜை நடத்தப்பட்டு 13 பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்க வேண்டும். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுற்றுச்சூழல் பிரிவு சார்பில் 1,500 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மராத்தான் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாபெரும் மக்கள் எழுச்சி நாளாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கிங், துணை செயலாளர் கீதா, பொருளாளர் சேகர், நிர்வாகி புல்லட் ரவி, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் இறைவெங்கடேஷ், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் நிர்வாகி கந்தசாமி, பாண்டியன் நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது.
    • குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100 ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட குடும்ப நலச் சார்பில் வாசக்டமி இரு வார விழா டிசம்பர் 4-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இரு வார விழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிளான அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசாரம் செய்ய அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்து அதிக எண்ணிக்கையில் தகுதியுள்ள தம்பதியர்களில் ஆண்கள் பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் என்.எஸ்.வி. சிறப்பு முகாம் தொடக்கமாக வரும் 28-ந் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார மருத்துவனையிலும், 30-ந் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 2.11.2022 அன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100- ம் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்களும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ. 200-ம் தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.எளிய பாதுகாப்பான வாசக்டமி மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி, தையல் இன்றி செய்யப்படுகிறது.

    ஆனந்த வாழ்க்கை பெற தடையில்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லை. கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அளிபபதில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும்.

    இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
    • தேவகோட்டை பஸ் நிலையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தேவகோட்டையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    சமீப காலமாக கூட்டநெரிசல் காரணமாக பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்துடன் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தினமும் காலை, மாலை நேரங்களில் ஆய்வு செய்வேன் என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார். அப்போது காவலர் சிலம்பரசன் உடன் இருந்தார்.

    • மண்வளம் மேம்படும் எனவும் உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் பயன்பாடுகள் பற்றியும் பறவைக் குடியில் அமைத்தால் பகலில் தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
    • வேளாண் கருவிகள் வாடகை மற்றும் வேளாண் கருவிகள் இருப்பு பற்றியும் சோலார் பம்ப்செட் அமைப்பது பற்றியும் பண்ணை குட்டை பற்றியும் பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலஷ்மி வரவேற்றார். தொடர்ச்சியாக வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் சம்பா தாளடி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை வரப்பில் உளுந்து சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து பயிறுசாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.

    மண்வளம் மேம்படும் எனவும் உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் பயன்பாடுகள் பற்றியும் பறவைக் குடியில் அமைத்தால் பகலில் தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் இரவில் ஆந்தை பந்தலாக அது செயல்பட்டு எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் இளவரசன் தோட்டக்கலை துறை மானியங்கள் பற்றியும் பழ மரங்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி பற்றியும் கூறினார்.

    வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கௌசல்யா வேளாண் கருவிகள் வாடகை மற்றும் வேளாண் கருவிகள் இருப்பு பற்றியும் சோலார் பம்ப்செட் அமைப்பது பற்றியும் பண்ணை குட்டை பற்றியும் பேசினார்.

    வேளாண்மை துணை அலுவலர் ரவி பி.எம். கிசான் திட்டத்தில் கே.ஒய்.சி. ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது பற்றி பேசினார்.

    இதில் வேளாண்மை அலுவலர் கிரிஜா, தோட்டக்கலை அலுவலர் மதுமிதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண்மை அலுவலர் நந்தினி, உதவி அலுவலர் விற்பனை உதவி அலுவலர் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர்.

    எதிர்வரும் பருவங்களுக்கு ஏற்ப அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சிகள் கண்டுனர் சுற்றுலாக்கள் செயல் விளக்கங்கள் மற்ற செயல்பாடுகள் பற்றிய தீர்மானங்கள் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக் மற்றும் அகல்யா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
    • நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார வன அலுவலர் சுகுணா, மாவட்ட வன அலுவலர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை அருளாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த ஆண்டு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
    • விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூர், பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    நரியனூர் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் உள்ளது. தற்போது மஞ்சள் நோய் எனப்படும் புதிய வகை நோய் தாக்குதல் காரணமாக சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    எனவே, மஞ்சள் நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற அரசு வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டர்.
    • அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பார்வையிட்டர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூறினார்.

    இந்த ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக திகழ வேண்டும் என அரசு சிறப்பு செயலர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீரின் தரம் குறித்து நாள்தோறும் பரிசோதனை செய்து விநியோகம் செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த மற்றும் தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் முறையை பற்றிய கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையான விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி அனைத்து அரசு திட்டங்களையும் பெறும் வகையில் அலுவலர்கள் ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும்.

    அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளை கவரும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சோப்பு பயன்படுத்தி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை செய்ய வேண்டும். அடல் டிங்கர் ஆய்வகத்தில் மாண வர்களை அழைத்துச்சென்று உரிய முறையில் செய்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்.இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கல்வியோடு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் அரசு புறம்போக்கு நிலங்க ளில் மரம் வளர்க்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னேற விளையும் திட்டங்களை தயார் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் திட்டங்களை செயல் படுத்துவதில் முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×