என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumaniramadoss"

    • குடும்பத்தினர் டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
    • சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார் .

    அப்போது கட்சி நிறுவனரான நான் இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட போவதாக அறிவித்தார். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

    இந்த நிலையில் பா.ம.க. வின் பல்வேறு நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் கட்சியில் தலைவராக தொடர வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று மாலை 4 மணி அளவில் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோ சனை நடத்துவதற்காக டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் இளைஞர் அணி தலைவர் முகுதனின் தாயாருமான காந்தி, இளைய மகள் கவிதா, மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்,மயிலம் எம்.எல்.ஏ.சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி,முன்னாள்எம்.பி. செந்தில்குமார், பா.ம.க. மாநில நிர்வாகி வக்கீல் பாலு ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்திக்க வந்தனர்.

    இதில் பா.ம.க. பொரு ளாளர் திலகபாமாவிற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.

    இன்று காலை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும்பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்திக்க உள்ளனர். அதில் சுமூகமான முடிவு ஏற்படும் என பா.ம.க. வட்டாரம் தெரிவிக்கிறது.

    டாக்டர் ராமதாஸ் மகள்கள் மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் கட்சியினர் வெளியே சென்ற பிறகு மீண்டும் ஆலோசனை ஈடுபட்டனர்.

    இரவு வரை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    ராமதாசை சந்தித்து விட்டு வந்த வக்கீல் பாலுவிடம் நிருபர்கள், ஆலோசனையில் என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்கு பாலு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இது வழக்கமான நிகழ்வு தான் எனக் கூறிவிட்டு எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.

    3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை முடிந்த நிலையில் டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்தி, இளைய மகள் கவிதா மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் ஆகியோர் மட்டுமே டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வக்கீல் பாலு,முன்னாள் எம்.பி. செந்தில்குமார்,தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்ஆகியோர் டாக்டர் அன்புமணி ராமதாசை இன்று சென்னையில் சந்திக்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

    • நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல.
    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல.

    ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் இயற்கை உரத்திற்காக ரூ.17,924, தொடக்கநிலை ஆள் கூலிக்காக ரூ.12,000 என முதல் இரு வாரங்களில் மட்டும் ரூ.39,116 ஏக்கர் ரூ.15,646 செலவாகும் என வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.

    வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் இரு வாரங்களைக் கடந்தவை. அவற்றுக்கும் இந்த மதிப்பீட்டின்படி தான் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல.

    அதுமட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை. அதனால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாகவே கருத வேண்டும். அதை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார்
    • குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

    அரசை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன, இதுபற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.

    இந்நிலையில் இந்த பதிலுக்கு பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தொடங்கிய பாராளுமன்றகுளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

    அப்போது, ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் முதலில் ஐயாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தொண்டர்களின் உணர்வை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்துள்ளார்.

    • பாமக இளைஞர் சங்கத் தலைவராக பரசுராமன் முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
    • இது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருது முரண்பாடு எழுந்தது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை நியமனம் செய்தது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று பொங்கல் கொண்டாடியுள்ளனர். 

    • கோயம்பேடு பஸ் நிலையம் பூங்காவாக மாற்றப்படும்.
    • 158 நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதிலும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற 2003-2004-ம் ஆண்டு முதல் பா.ம.க. சார்பாக பொது நிழல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று பொது நிழல் நிதி நிலை அறிக்கையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

    இந்த அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப் பான முறையில் கையாளு வதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,02,010 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்ப தால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

    நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,68,978 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,97,123 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்ப தற்காக அசலாக செலுத்தப் படும்.

    தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அவற்றை நிரப்ப நடப்பாண்டில் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும்.

    அடுத்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மொத்தம் 7.5 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்

    தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

    தமிழ்நாட்டில் ஜூலை 25-ந்தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    உள்ளாட்சி அமைப்பு களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஜனவரி 25-ந்தேதி உலக தமிழ் மொழி நாளாக கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.

    மே 1-ந்தேதி முதல் மது விலக்கு அமுலுக்கு வரும். மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.318-க்கு வழங்கப்படும்.

    பெண்கள் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லாத இளைஞர் களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்து இருந்தால் ரூ.1000, தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.2000, பிளஸ்-2 தேறியிருந்தால் ரூ.3 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    சென்னையில் அனைத்து பஸ்களிலும் இலவச பயணம், கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்கா வாக மாற்றப்படும். விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படும். மின்சார கட்டணம் குறைக்கப்படும்.

    ×