என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apply"

    • திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட சமுக நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில் நுட்பப் பணியாளா், களப் பணியாளா் மற்றும் பாதுகாவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்டபிள்யூ அல்லது சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதே போல, மூத்த ஆலோசகா் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு 40 வயதுக்கு மிகாமலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    களப்பணியாளா் பணிக்கு எம்எஸ்டபிள்யூ படித்தவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், சுழற்சி முறையில் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும், 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடா்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்கள் சென்றடைய செய்ய ஆா்வம் உடையவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    பாதுகாவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவராகவும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தவறியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35, 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நவம்பா் 10-ந் தேதிக்குள் தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அருப்புக்ேகாட்டை அருகே உள்ள சமத்துவபுரத்தில் 21 வீடுகளுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அருணாச்சலபுரம் கிராம ஊராட்சி, சின்ன செட்டிகுறிச்சி உட்கடை கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இவற்றில் 79 வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 21 வீடுகளுக்கு பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் தற்போது 21 வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    அதன்படி எஸ்.சி./எஸ்.டி. பிரிவில் 2 பயனாளிகளும், எம்.பி.சி. பிரிவில் 6 பயனாளிகளும், பி.சி. பிரிவில் 3 பயனாளிகளும் மற்றும் ஓ.சி. பிரிவில் 10 பயனாளிகளும் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.

    சின்னசெட்டிகுறிச்சி உட்கடை கிராமத்திற்கு 3 கி.மீ. சுற்றளவில் வசித்து வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற தகுதியான பயனாளிகள் அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விருப்ப மனுவினை தேவையான ஆவணங்களுடன் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
    • இதில் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, வேளாண்மை, ஆடை, வாகனம், அழகு மற்றும் ஆரோக்கியம், உணவு பதப்படுத்தும் முறை, தளவாடங்கள் மற்றும் பொருத்துதல், கற்கள் மற்றும் நகைகள், பசுமை வேலை, சுகாதார பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், உள்கட்டமைப்பு உபகரணங்கள், கருவியாக்கம், ஐ.டி., வாழ்க்கை அறிவியல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், வண்ணப்பூச்சுகள் மற்றும் பூச்சு, பிளம்பிங், சில்லறை விற்பனை, ரப்பர், விளையாட்டு, தொலை தொடர்பு மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளால் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை வருகிற 20-ந் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0452-2308216-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் பூப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய மையம் அமைத்து செயல்படுத்துவதற்கு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய விளையாட்டு மையம் அமைக்க பூப்பந்து விளையாட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது,

    ஆகையால் முன்னாள் சாம்பியன் விளையாட்டு வீரர் பயிற்றுநராக நியமிக்கும் வகையில் பூப்பந்து விளையாட்டு பிரிவில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர் பயிற்றுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

    விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படும். தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்யும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு, 2023-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 30-ந்தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொ கையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையோ அணுகலாம்.

    மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை மாண வர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ''ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண். 044-29515942, மின்னஞ்சல் முகவரி:tngovtiitscholarship@gmail.com'' என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமுதாய நல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

    இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதிஉடையோருக்கு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றல் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில இந்த பதக்கத்தைப் பெறத் தகுதிஉடையவர் ஆவார்.

    இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த 3 விண்ணப்பப் படிவங்கள் வருகிற 12-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    2022-23-ம் ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் பங்கேற்ப வர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகிய வற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

    திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.

    1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவ ர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithrurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04567-232130 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.12.2022. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • வாழ்ந்து காட்டுவோம் திட்ட மண்டல ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்ப டுத்தப்பட்டு வருகின்றது.

    இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் காளையா ர்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை வட்டாரங்களை சேர்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் வாயிலாக ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவி க்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனை வோர், குழு தொழில், உற்பத்தியாளர்குழு, உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றிற்கு தொழில் சார் ஆலோசனைகள் வழங்கவும், நடைமுறையில் உள்ள உற்பத்திசார் தொழில் நுட்பங்களை வழங்கவும், மதிப்புக்கூட்டு செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும் மண்டல ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

    விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்கள் https://www.tnrtp.org/notification.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிமாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க ேவண்டும்.

    தொழில் நுட்ப ஆலோசகர் (Technical Consultant /Advisior) பணிகளுக்கு பண்ணை தொழில் (நெல், கடலை, பயிறு வகைகள், தென்னை உற்பத்தி) M.Sc Agri, B.Tech Agri, B.Tech Biotechnology, MBA Agri, M.Sc. horticulture or any other Agri related Course கல்வித்தகுதியும், பண்ணை சார் தொழில் (மாடு, ஆடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு) M.Sc Animal husbandry, M.Sc. fisheries or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் பண்ணை சாரா தொழில் (பாரம்பரிய கைவினைப் பொருட்கள், அப்பளம், சர்க்கரை, தையல், மண்பாண்டம், பனை இலை பொருட்கள், கடல் சங்கு மற்றும் வெல்டிங்) M.Sc. Agribusiness Management,M.B.A. Marketing, M.B.A. Agribusiness Management or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடம் அனுபவம் இருக்க வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களில் 5 பணியிடங்கள் உள்ளன.

    வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் அங்கீகரி க்கப்பட்ட வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள்படிவத்தில் 27.12.2022-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பத்தின் மீதான பரிசீலினை மாநில திட்ட மேலாண்மை அலுவ லகத்தில் மேற்கொள்ள ப்பட்டு தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கப்ப டுவார்கள். தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் மாநில திட்ட மேலாண்மை அலகின் முதன்மை செயல் அலுவலரால் தேர்வு செய்யப்படும்.

    மேலும் விபரங்களுக்கு https://www.tnrtp.org/notification என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பல்நோக்கு கட்டிடம், கோர்ட் வாசல், மேலூர் ரோடு, சிவகங்கை என்ற முகவரியிலும், 04575 – 248096 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம், வட்டார அளவில் காலியாக உள்ள, 2 வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் 12 உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், ஒரு கணக்காளர் மற்றும் எழுத்தர் என 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கம் திறன் பெற்று இருக்க வேண்டும். உதவி தொழில் நுட்ப மேலாளர்களுக்கான பணியிடங்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் திறன் முடித்திருக்க வேண்டும். கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    இந்தபணியிடங்கள் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, அனுபவம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பணி நியமன முகமைகள், தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்(வே.தொ.மே.மு), வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நெ. 1, செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், சேலம் மாவட்டம்-636 001 என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் படித்து முடித்து வேலை இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழக அரசின் வேலை வாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்து வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

    அதன்படி வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்த பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் குடும்ப வருமானம் உடையோர், 45 வயதுக்கு உட்பட்ட பட்டியல் இனத்தவர், 40 வயது இதர வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறுபவர் தமிழகத்தில் பள்ளி-கல்லூரி படித்து இருக்க வேண்டும். ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது.

    அரசு மூலம் நிதி உதவி பெறுபவராக இருக்கக் கூடாது. பள்ளி- கல்லூரிக்குச் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிந்த- எழுத படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் வருமானம், வயது வரம்பின்றி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில் கல்வி படித்தவர்கள் உதவித் தொகை பெற இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிந்தவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயத்தில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளாக இருக்க வேண்டும்

    பெரம்பலூர்

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைபடுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது.

    விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக்கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும், விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளாக இருக்க வேண்டும்.

    பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் உரிமம் மற்றும் மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் டி.ஜி.சி.ஏ.ஆல் அங்கீகரிக்கப்பட்ட டிரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள்.

    மேலும், இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இப்பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம் மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கி வழிவகை செய்யப்படும். மேற்கண்ட திட்டத்தில் தகுதியுள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.





    ×